ரபாடா பிழையில்லாமல் துல்லியமாக வீசினார், எல்லா பந்துகளும் 140 கிமீ, எல்லா பந்துகளும் ஸ்டம்ப் அல்லது கவர்ச்சி ஆஃப் ஸ்டம்ப் வலைவீச்சு பந்துகளாக இருந்தன. ரகானே ஆட்டமிழந்த பந்தே ரபாடாவின் பந்து வீச்சு எப்படி என்பதற்கு எளிய சுயதேற்றமாக இருக்கிறது. அதுவும் கோலியை ஆட்டிப்படைத்து விட்டார் ரபாடா, ஒரே பீட்டன், ஆனால் கோலியும் சவாலுக்கு தன்னை இழக்காமல் நின்றார்.
கிரீசில் நின்று ஆட வேண்டும் என்றால் கட்டுக்கோப்பான உத்தி, பொறுமை, கால்நகர்த்தல் அவசியம், இதனை கோலி வெளிப்படுத்தினார். கோலி முதல் 100 பந்துகளில் சுமார் 60 பந்துகளை ஆடாமல் விட்டார். மொகீந்தர் அமர்நாத் நினைவு வந்தது. ஆனாலும் ஓவர் பிட்ச் ஆஃப் வாலிகளை அவர் கவர் டிரைவ், நேர் ட்ரைவ், ஆன் ட்ரைவ், பிளிக் என்று அசத்தினார், ஒரு முறை ரபாடா குத்தி எழுப்ப திரும்பி பைன் லெக்கில் சிக்ஸ் விளாசினார், மொத்தம் 12 பவுண்டரி 1 சிக்ஸ் என்று அருமையாக ஆடினார் கோலி.
விராட் கோலி 79 ரன்கள் எடுத்து மீண்டும் தன் பாதுகாப்பு ஆட்டத்தைத் துறந்து மீண்டும் அவுட் ஆஃப் பார்மில் இருந்த ஆட்டத்துக்குத் திரும்பி கால்களை குறுக்காக நகர்த்தி எல்லா பந்துகளையும் ஆடும் முயற்சியில் ரபாடாவின் அதியற்புத பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். 201 பந்து 79 ரன்கள் கோலி. இந்திய அணி புதிய பந்து எடுக்கும் தேவையில்லாமல் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு வெளியேறியது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா ஆட வந்த போது பும்ராவின் விளையாட முடியாத ஒரு பந்தை, ஆனால் ஆடியே ஆகவேண்டிய நிர்பந்திக்கும் ஒரு பந்தை டீன் எல்கர் தொட எட்ஜ் ஆகி புஜாராவிடம் கேட்ச் ஆனது. தென் ஆப்பிரிக்கா 17/1. ஆட்ட முடிவில் அய்டன் மார்க்ரம் 8 ரன்களுடனும் மகராஜ் 6 ரன்களூடனும் களத்தில் இருந்தனர்.