முகப்பு » புகைப்பட செய்தி » பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

இந்தியாவில் உலகக் கோப்பை போட்டியை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ மற்றும் ஐசிசி இடையே ஏற்கனவே சில சிக்கலகள் இருப்பதாக தெரிகிறது.

  • 17

    பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

    உலக கிரிக்கெட்டில் பிசிசிஐ மிகவும் சக்திவாய்ந்த வாரியமாக உள்ளது. கிரிக்கெட் உலகில் உள்ள எந்த கிரிக்கெட் வாரியத்தையும் விட பிசிசிஐ அதிக நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளது. கிரிக்கெட்டில் பிசிசிஐயை எதிர்கொள்ள ஐசிசிக்கு கூட துணிச்சல் இல்லை என்பது நம்ப முடியாத உண்மை. ஐசிசிக்கு வரும் நிதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

    அத்தகைய பிசிசிஐக்கு ஐசிசி இம்முறை கடும் அதிர்ச்சி அளிக்கும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அட்டவணைப்படி... 2023, அக்டோபர் முதல் நம் நாட்டில் இந்தப் போட்டி தொடங்க வேண்டும். ஆனால், தற்போது இந்தப் போட்டியின் நிர்வாகம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 37

    பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

    இந்தியாவில் உலகக் கோப்பை போட்டியை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ மற்றும் ஐசிசி இடையே ஏற்கனவே சில சிக்கலகள் இருப்பதாக தெரிகிறது. மேலும் ஏசிசி (ஆசிய கிரிக்கெட் கவுன்சில்) உடன் பிசிசிஐ பிரச்சனை இருந்தது. அடுத்த ஆண்டு கிரிக்கெட் தொடர்பாக இரண்டு மெகா போட்டிகள் நடத்தப்படும். ஒன்று ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை. அதை இந்தியா நடத்தும்.

    MORE
    GALLERIES

  • 47

    பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

    இரண்டாவது ஆசிய கோப்பை. இதை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. ஆனால், பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா சார்பில் பிசிசிஐ அறிவித்துள்ளது. இது நடந்தால், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. இதனால், இவ்விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆசிய கோப்பைக்கு இந்திய அணியும், ஒரு நாள் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியம் செல்லாவிட்டால் போட்டிகளை நிர்வகிப்பதில் சிக்கல் . இது தொடர்பாக ஏசிசி மற்றும் ஐசிசி நிர்வாகம் பிசிசிஐயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 57

    பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

    இந்த விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே இந்தியாவில் உலகக் கோப்பையை நடத்துவது சாத்தியம். மறுபுறம், வரிவிதிப்பு பிரச்சினையும் போட்டியின் நிர்வாகத்திற்கு சிக்கலாக மாறியுள்ளது. ஐசிசி விதிகளின்படி, உலகக் கோப்பையை நடத்த ஐசிசிக்கு போட்டியை நடத்தும் நாடு வரிவிலக்கு அளிக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக எதுவும் செய்ய முடியாது என ஐசிசியிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

    அதாவது ஒருநாட்டில் உலகக்கோப்பை தொடர் நடத்த வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசு வைத்திருக்கும் வரிகளை கட்ட வேண்டும். எனவே தொகுத்து வழங்கும் வாரியங்கள், தங்களது அரசிடம் கேட்டு வரிவிலக்கை பெற்று தர வேண்டும். ஆனால் பிசிசிஐ-ன் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் தான் டி20 உலகக்கோப்பை நடைபெற்றது. அப்போது வரிவிலக்கு கிடைக்காததால், அதனை ஈடுகட்ட பிசிசிஐ-யிடம் இருந்து ரூ. 190 கோடியை ஐசிசி பெற்றுக்கொண்டது.

    MORE
    GALLERIES

  • 77

    பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

    தற்போது ஐசிசி வரி கட்டணத்தை 21.84 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு வரி சலுகைக்கு அனுமதி வழங்காவிட்டால் 900 கோடி ரூபாய் பிசிசிஐ வழங்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் ஒரு நாள் உலகக்கோப்பை தொடரை நடத்த பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. மத்திய அரசுக்கும் பிசிசிஐக்கும் நிலவி வரும் வரி பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும். இதன் மூலம் வரி விதிப்பு தொடர்பாக ஐசிசி முடிவெடுத்தால், உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

    MORE
    GALLERIES