கிரகங்களில் சுக்கிரன் செல்வம் மற்றும் புகழுக்கு அதிபதி ஆவார். வேத சாஸ்திரங்களின்படி, சுக்கிரன் கிரகம் தொடர்ந்து தனது ராசியை மாற்றிக்கொண்டேதான் இருக்கும். இப்போது வருகின்ற மே 30-ம் தேதி புதன் அதிபதியாக இருக்கும் மிதுனத்தில் இருந்து விலகி சந்திரனுக்கு சொந்தமான கடக ராசிக்குள் நுழைகிறது.பின்னர் ஜூலை 7ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார்.
இதன் பிறகு சூரியனுக்கு சொந்தமான சிம்ம ராசிக்குள் செல்லும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தூக்கத்தில் கூட அதிர்ஷ்டம் அடிக்கும் யோகம் கிடைக்கப்போகிறது. ஒரு மாதத்திற்கு, இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட கார ராசியினர் யார் யார் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
கடகம் : இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நன்மை தரும். உத்தியோகத்தில் உங்கள் நிலை நன்றாக இருக்கும் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். இந்த ராசிக்கு மே 30 முதல் சாதகமான சூழ்நிலைகள் நிலவும்.. நிதி ரீதியாக இருந்த பிரச்னைகள் நீங்கி வலுப்பெறும். வேறு எந்த விதமான பிரச்சனைகளும் இருக்காது. வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மேம்படும்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான நேரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும், ஒரு மாதத்திற்கு எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
மீனம்: சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசியினருக்கு அற்புதமாக இருக்கும். புதிய வாகனங்கள் வாங்கலாம். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். உடல்நலப் பிரச்சனைகள் இருக்காது. வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள். திருமணமானவர்கள் குழந்தைகளைப் பெறலாம். வேலையை மாற்ற நினைப்பவர்கள் புதிய வேலைகள் தொடர்பான சலுகை கடிதங்களைப் பெறலாம்.