பங்குனி உத்திரம்: வயலூர் முருகன் கோயிலில் காவடி, பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு...
Vayalur Murugan Temple | திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.
திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான மாவட்டம் வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.
2/ 6
இக்கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்றது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
3/ 6
இதையொட்டி இன்று அதிகாலை முதலே பெருந்திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
4/ 6
மேலும் பங்குனி உத்திர திருநாளில் திருச்சி வயலூர் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
5/ 6
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பங்குனி உத்திரத் திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
6/ 6
வயலூர் முருகன் கோவிலுக்கு பால் குடம் எடுத்து வந்த பெண்கள்