பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபிஷேகப் பால், நெய், மோர் , தயிர், துளசி இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத்திலிருந்து பிரத்யேகமாகக் கொண்டு வரப்படுகின்றன. அந்த கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது. இது திருப்பதியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு இதுவரை யாரும் சென்றதில்லை. அனுமதித்ததில்லை. கோவில் அர்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என சொல்லப்படுகிறது. அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியில் சிலவற்றை இழந்துள்ளார். இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக்கொண்டுள்ளார். அதனால்தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் முடியை தானமாக பெருமாளுக்குக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
பெருமாளுக்கு சார்த்தப்பட்ட மலர்களை மறுநாள் காலை சுத்தம் செய்த பின் அவற்றை அர்சகர்கள் கர்பகுடி அல்லது கருவறை கூடையில் போடுவதில்லை. மாறாக கோவிலின் பின் பக்கத்தில் அமைந்துள்ள அருவியில் கொட்டுகின்றனர். அப்படி கொட்டும் பூக்களை ஒருபோதும் அவர்கள் அங்கு பார்த்ததில்லையாம். அவை அனைத்தும் கோவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எர்பேடு என்ற கிராமத்திற்கு சென்று தேங்கி நிற்கின்றனவாம்.
பச்சை கற்பூரம், கற்பூரம் என எந்த வகை கற்பூரமாக இருந்தாலும் அதை ஒரு கல்லில் வைத்து தொடர்ந்து ஏற்றினால் அல்லது அதன் காற்று பட்டாலே அந்த கல் விரிசில் அல்லது பிளவை உண்டாக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் திருப்பதி சிலையில் இன்றளவும் எந்த விரிசல், பிளவுகளும் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கான எந்த அடையாளங்களுமே இல்லை என்கின்றனர்.
சிலையில் வியர்வை : பெருமாளின் சிலை வெறும் கல்லாகப் பார்ப்பதில்லை. மக்களோடு ஒன்றினைந்து வாழ்ந்த தெய்வத்தின் உருவம். அதற்கு சிறந்த உதாரணம்தான் சிலையின் முகத்தில் வடியும் வியர்வை. ஆம், சிலை 110 டிகிரி ஃபாரன்ஹீட்டில் செங்குத்து நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் 3000 அடி உயரத்தில் இருப்பதால் சுற்றிலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. சிலைக்கு தினமும் அபிஷேகம் என்று சொல்லப்படும் புனித நீராடலும் செய்யப்படுகிறது. இருப்பினும் அவரின் முகத்தில் வியர்வை வடிவதாகக் கூறப்படுகிறது. அந்த வியர்வை கூட சில்க் துணியால் மட்டும் துடைப்பார்களாம். இதற்கென ஒரு அர்ச்சகரே இருக்கிறார்.