முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

Thrissur pooram 2022 | திருச்சூர் பூரம் முக்கிய நிகழ்வான பிரமாண்டமான வான வேடிக்கை கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. திரிசூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 11-05-2022 அதிகாலை நடைபெற இருந்த பிரமாண்ட வான வேடிக்கையை ஒத்தி வைக்க பாறமேக்காவு, திருவம்பாடி தேவசம் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்..

  • 115

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    உலக புகழ் பெற்ற பூரங்களின் பூரம் என்று வர்ணிக்கப்படும் திருச்சூர் பூரம் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இரு வருடங்களுக்கு பிறகு மக்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 215

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    திருச்சூர் பூரம் கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும்  வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகும். திருச்சூர் பூரம் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 315

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    இது கொச்சி மன்னர் சக்தன் தம்புரானால் தொடங்கப்பட்டது. திருச்சூர் பூரத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் ஆண்டுதோறும் வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 415

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    திருச்சூர் பூரம் மே மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. வடக்கும் நாதன் கோவில் முன் பகுதியில் உள்ள பிரமாண்டமான மைதானத்தில்  யானைகள் அணிவகுத்து நின்று பாறமேக்காவு கோவில் மற்றும்  திருவம்பாடி கோயில்  சார்பாக  பஞ்ச வாத்தியங்கள் வாசிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 515

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    அதனை தொடர்ந்து யானை மீது அமர்ந்து கொண்டு நடைபெறும் வண்ண மயமான குடமாற்றம் என்ற முக்கிய நிகழ்வும் லட்சக்கணக்கான பார்வையால்ர்களுக்கு கண்களுக்கு விருந்து ஆகும்.

    MORE
    GALLERIES

  • 615

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    விடியற்காலையில் நடைபெறும் பிரமாண்டமான  வானவேடிக்கை போன்றவை திரிசூர் பூரத்தின் முக்கிய அம்சங்களாகும். பிரம்மசுவம்  மடத்தில் திருவம்பாடி பகவதியின் திருவுருவம் கொண்டு செல்லும் புறப்பாடு எழுந்தருளல் சடங்கு.

    MORE
    GALLERIES

  • 715

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    பஞ்சவாத்தியத்துடன் மடம் வருகை, மதியம் பாரமேகாவு கோவிலுக்கு ஊர்வலம், ஒரு மணி நேர செம்பட மேளம், இளஞ்சித்தறமேளம், தெக்கோட்டிறக்கம், பாறமேக்காவு பகவதி மற்றும் திருவம்பாடி பகவதியின் நேருக்கு நேர் திருக்காட்சி, குடமாற்றம், மாலையில் சிறு வானவேடிக்கை, இரவு நேர பஞ்சவாத்தியம் ஆகியவற்றை திருவிழாவின் முக்கிய சடங்குகள் மற்றும் ஆசார முறைகள் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 815

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    இந்நிலையில் சொவ்வாய்கிழமை திருச்சூர் வடக்குநாதன்  கோவிலில் இருந்து சாமி சிலையுடன் சிவக்குமார் என்ற யானை கோவில் முன் பகுதி வழியாக வெளியேறி, ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் துவங்கி 6 - மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் புதன் கிழமையான இன்று காலையில் பூரம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    MORE
    GALLERIES

  • 915

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    முக்கியமாக இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து துவங்கி திருவம்பாடி பகவதி அம்மன் கோவிலில் முடிவடைந்தது.

    MORE
    GALLERIES

  • 1015

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில்  50க்கும் மேற்பட்ட யானைகள், மாயாஜால வித்தைகளான ஐந்து மேளங்கள் தொடர்ந்து ஒலிக்கும் பஞ்சவாத்தியம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 1115

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    திருச்சூர் பூரம் முக்கிய நிகழ்வான பிரமாண்டமான வான வேடிக்கை கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. திரிசூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 11-05-2022 அதிகாலை நடைபெற இருந்த பிரமாண்ட வான வேடிக்கையை ஒத்தி வைக்க பாறமேக்காவு, திருவம்பாடி தேவசம் நிர்வாகிகள் முடிவு செய்திருந்தது.

    MORE
    GALLERIES

  • 1215

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    இந்த விழாவினை காண வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இவ்வாண்டு சுமார் 20-லட்சத்திற்கும் மேலானோர் இந்த பூர நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 1315

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    கொரோனா கட்டுபாடுகளால் கடந்த இரு ஆண்டுகளாக களையிழந்த இந்த திருவிழா  இவ்வாண்டு பிரமாண்டமாக நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 1415

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    சுமார் 20 - லட்சத்திற்கு மேலான  பொதுமக்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது . மொத்தமாக 5000  போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சூர் பூரம் நிகழ்ச்சியை முன்னிட்டு  திருச்சூர் மாவட்டத்திற்கு பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 1515

    திருச்சூர் பூரம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

    யானைகள் வரிசையாக நிற்கும் காட்சி

    MORE
    GALLERIES