முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Mahayoga: 700 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச மஹாயோகம்... இந்த 3 ராசிகளுக்குப் பொன் மழை பொழியும்..!

Mahayoga: 700 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச மஹாயோகம்... இந்த 3 ராசிகளுக்குப் பொன் மழை பொழியும்..!

mahayogam | 700 ஆண்டுகளுக்குப் பின் கடந்த பிப்ரவரி 19, 2023 முதல், கேதார், ஷங்க், ஷஷ, வரிஷ்ட மற்றும் சர்வார்த்தசித்தி யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த 3 ராசியினருக்கு பஞ்ச மஹாயோகம் தான்.

  • 14

    Mahayoga: 700 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச மஹாயோகம்... இந்த 3 ராசிகளுக்குப் பொன் மழை பொழியும்..!

    வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது அதன் நிலையை மாற்றுகின்றன, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 9 கிரகங்களும் தான் இருக்கும் ராசிகளை மாற்றுகின்றன. இதனால், மற்ற கிரகங்களுடன் சில சமயம் இணைந்து கூட்டணி உருவாகிறது. இந்த கிரகப் பெயர்ச்சிகளும், கிரக சேர்க்கைகளும் பல சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த நேரத்தில் சனி கும்பத்தில் உள்ளது. இதனுடன் சூரியன் கும்ப ராசியில் அமர்ந்து சனியுடன் இரண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அதே சமயம் மீனத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். மீனம் குருவின் ராசி. இதன் பலனாக 700 ஆண்டுகளுக்குப் பின் கடந்த பிப்ரவரி 19, 2023 முதல் கேதார், ஷங்க், ஷஷ, வரிஷ்ட மற்றும் சர்வார்த்தசித்தி யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த 3 ராசியினருக்கு பஞ்ச மஹாயோகம் தான்.

    MORE
    GALLERIES

  • 24

    Mahayoga: 700 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச மஹாயோகம்... இந்த 3 ராசிகளுக்குப் பொன் மழை பொழியும்..!

    தனுசு: பஞ்ச மகாயோகம் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நேரத்தில், நீங்கள் வாகனம் அல்லது சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது.போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அல்லது வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் ஏற்றது. மேலும், இந்த நேரத்தில் வர்த்தகர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் பெரும் பயனடையலாம். இந்த நேரத்தில் நீங்கள் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறலாம். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

    MORE
    GALLERIES

  • 34

    Mahayoga: 700 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச மஹாயோகம்... இந்த 3 ராசிகளுக்குப் பொன் மழை பொழியும்..!

    மிதுனம்: பஞ்ச மகாயோகம் உருவாவதால் மிதுன ராசிக்கு இனி நல்ல நாட்கள் தொடங்கும். ஏனென்றால், உங்கள் ஜாதகத்தில் ஹம்ஸ, மாளவ்ய என்ற இரண்டு ராஜயோகங்கள் உருவாகின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் உங்கள் வேலையில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். மேலும் வேலையில்லாதவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் உங்கள் நற்பெயரும் உயரும். இந்த நேரம் தொழில் முனைவோருக்கு சாதகமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 44

    Mahayoga: 700 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச மஹாயோகம்... இந்த 3 ராசிகளுக்குப் பொன் மழை பொழியும்..!

    கும்பம்: கும்ப ராசியிலேயே சூரியன் மற்றும் சனியின் கூட்டணி அமைவதால் பஞ்ச மகாயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அபரிமிதமான பண ஆதாயம் உண்டாகலாம். பெரிய அளவில் சொத்து வாங்கலாம். வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்கும். பெரிய வெற்றியை அடைய முடியும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். வணிகத்தில் கூட்டு அல்லது ஒப்பந்தம் இறுதியாகும். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம். அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது.

    MORE
    GALLERIES