குருவானது தனுசு, மீனம் அல்லது ஒரு சில குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த ராசியில் இருக்கும் போது அந்த ஜாதகக்காரர்களுக்கு திவ்ய யோகம் உருவாக்கும். பொதுவாக இந்த யோகம் மேஷம், துலாம், மகரம், கடகம் ஆகிய ராசிக்காரர்களின் ஜாதகத்தில் உருவாகும். இந்த திவ்ய யோகம் யாருடைய ஜாதகத்தில் இருக்கிறதோ, அவர்கள் நிதி அதிகரிப்பு மற்றும் சிறப்பான குணநலன்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்தவகையில், ஜாதகத்தில் ஏற்படும் சுப யோகங்களையும் அதன் பலன்களை பற்றி காணலாம்.
தெய்வீக யோகம் (Divine Yoga) : குருவானது தனுசு அல்லது மீன ராசியிலோ அல்லது சில குறிப்பிட்ட பிறப்புடைய ராசியில் இருக்கும் போது, அந்த நபரின் ஜாதகத்தில், திவ்ய யோகம் உண்டாகும். பொதுவாக இந்த யோகம் மேஷம், துலாம், மகரம், கடகம் ஆகிய ராசிக்காரர்களின் ஜாதகத்தில் காணப்படும். குருவின் ஆட்சி இடமான தனுசு மற்றும் மீன ராசிகாரர்கள் குருவின் நன்மைகளை அதிகமாக பெறுவார்கள்.
ஷஷா யோகம் (Shasha Yoga) : ஜாதகத்தில் சனியானது 1, 4, 7 அல்லது 10 ஆம் வீட்டில் இருந்தாலோ அல்லது மகரம் அல்லது கும்ப ராசியில் இருந்தாலோ அந்த ஜாதகத்தினருக்கு ஷஷ யோகம் (Shasha Yoga) உண்டாகும். இது ஒருவகை ராஜயோகம் ஆகும். மேலும், துலாம் ராசியில் சனி அமர்ந்திருந்தாலும், இந்த யோகம் சுப பலன்களைத் தரும். ஷஷா யோகம் யாருடைய ஜாதகத்தில் இருக்கிறதோ, அவர்கள் வாழ்க்கையில் செல்வந்தர்களாக காணப்படுவார். மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் இது அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
ருச்சக் யோகம் (Ruchak Yoga) : குண்டலியின் ருச்சக் யோகம் நல்ல பலன்களைத் தருவதாக கூறப்படுகிறது. செவ்வாய் கேந்திர ஸ்தானத்தில் அதாவது 1, 4, 7 அல்லது 10 ஆம் வீட்டில் அல்லது அதன் உச்சமான மகரம், மேஷத்தில் இருந்தால் ருச்சக் யோகம் உருவாகும். ருச்சக் யோகம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதன் நல்ல பலன் காரணமாக, ஒரு நபர் வலிமையாகவும், சிறப்பாகவும், தைரியமாகவும், மன ஆரோக்கியமாகவும் இருக்கிறார்.
ருச்சக் யோகம் எந்த இடத்தில் சுப பலன்களை தரும் : ஒருவருடைய ஜாதகத்தின் முதல் வீட்டில் ருச்சக் யோகம் அமைந்தால், அவர் உடல் வலிமை, பலம் மிக்கவர்களாக இருப்பார்கள். வியாபாரத்திலும் வெற்றி பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல், திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகத்தில் நான்காவது மற்றும் ஏழாவது வீட்டில் ருச்சக் யோகம் அமைந்தால், அந்த நபர் சமூகத்தில் மிகுந்த கௌரவத்தை பெறுவார். மாறாக, ஜாதகத்தின் 10 ஆம் வீட்டில் இந்த யோகம் அமைந்தால், அது அரசியல்வாதியாகவோ, அமைச்சராகவோ மிகுந்த கௌரவத்தைப் பெறுவர்களாம்.
ருச்சக் யோகம் எந்த இடத்தில் அசுப பலன்களைத் தரும் : ஜாதகத்தில் செவ்வாய் சுபமாக இருக்கும்போது தான் ருச்சக் யோகம் சுப பலன்களைத் தரும். ஏனென்றால், ஜாதகத்தில் செவ்வாய் அசுப நிலையில் இருந்தால் மாங்கல்ய தோஷம் உண்டாகும். மறுபுறம், செவ்வாய் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அசுப கிரகங்களால் பாதிக்கப்பட்டால், ருச்சக் யோகம் சுப பலன்களைத் தராது. இது தவிர ஜாதகத்தில் மாங்கல்ய தோஷமோ, பித்ரா தோஷமோ, கால சர்ப்ப தோஷமோ இருந்தாலும் இந்த யோகம் சுப பலன்களைத் தராது. இதன் காரணமாக, ஒரு நபர் ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்.
புதனின் ராசியான ஐந்தாம் வீட்டில் கன்னி அல்லது மிதுனத்தில் சுப கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுப ஸ்தானத்தில் சந்திரனுடன் செவ்வாய் இருந்தால், அந்த நபர் மிகவும் செல்வந்தர்களாக இருப்பார்கள். ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் வியாழன் தனுசு அல்லது மீன ராசியில் இருந்தாலோ அல்லது புதன் சந்திரனுடன் இணைந்திருந்தாலோ அந்த நபர் ஏராளமான செல்வங்களுக்கு அதிபதியாக இருப்பார்கள். ஐந்தாம் வீட்டில் சனியின் லக்னம் கும்பம் அல்லது மகர ராசியில் இருந்தால், அந்த ஜாதகத்தினர் கோடீஸ்வரராக இருப்பார்கள்.
சந்திரன் கேதுவுடன் இணைந்திருந்தாலோ அல்லது எட்டாம் வீட்டில் மகரத்துடன் இணைந்திருந்தால் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் ஏழையாகவே இருப்பார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் வீட்டின் அதிபதி ரிஷபம் அல்லது துலாம் ராசியில் இருந்து ஏழாம் வீட்டிற்கு அதிபதியாக சுக்கிரன் இருந்தால், அத்தகையவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தில் பத்து அல்லது ஏழாவது யோகம் உருவாகும்.