முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

Lord ganesha | இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. எந்தப் பூஜையிலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டாலும், புதன் கிழமையன்று நடைபெறும் விநாயகப் பூஜைக்கு விசேஷ முக்கியத்துவம் உண்டு. இந்நாளில் பக்தர்கள் அதிகாலையில் நீராடி கணபதியை வழிபடுவது நல்லது.

  • 17

    புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

    இந்து புராணத்தின் படி, விநாயகப் பெருமான் தன் தாயார் பார்வதிக்கு பிறந்தபோது, ​​புதன் பகவானும் கயிலாய மலையில் தான் இருந்தாராம். ஆகவே விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழிபாடு செய்ய வேண்டும் என்ற விதிக்கப்பட்டுள்ளது. அப்படி வழிபட்டால் புதன் தோஷங்கள் குறையும்.

    MORE
    GALLERIES

  • 27

    புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

    விநாயகர் அனைத்து கடவுள்களிலும் முதன்மையான கடவுளாக கருதப்படுகிறார். அவர் சித்தி புத்தியின் கடவுள். பக்தர்களின் வலியை நீக்கும் ஆனைமுகன் இவர். வாரத்தின் மூன்றாவது நாளான புதன் அன்று விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்து சாஸ்திரத்தின்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்தை வணங்குவதற்கான நாள். புதன் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாட்டால் அவர் மகிழ்ச்சியடைந்து பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

    MORE
    GALLERIES

  • 37

    புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

    அருகம்புல்: அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நன்மை தரும். விநாயகருக்கு துர்வா என்றால் மிகவும் பிடிக்கும். விநாயகருக்கு அருகம்புல்லை அர்ப்பணம் செய்யும் மரபு மிகவும் பழமையானது. கணபதி அருகம்புல்லை மிகவும் விரும்புவதாக நம்பப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

    மலர்கள்: தெய்வ வழிபாட்டில் கண்டிப்பாக மலர்கள்  வைத்து பூஜை செய்யப்படுகிறது. விநாயகருக்கு கூட பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் விநாயகருக்கு தாமரை பூ என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பூஜையின் போது எந்தப் பூவைச் சமர்ப்பித்தாலும் கணபதிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

    மோதகம்: லட்டு அல்லது மோதகம் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடிக்கும். விநாயகர் பூஜையில் கடவுளுக்கு மோதகம் கண்டிப்பாக வழங்கப்படும். மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விநாயகப் பெருமானின் பூஜைக்காக பிரத்யேகமாக விதவிதமான மோதகம் தயாரிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

    குங்குமம்: குங்குமம் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடிக்கும். இது செவ்வாய் கிரகத்தின் சின்னம். கணபதி மனம் மகிழ்ந்து  பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.விநாயகப் பூஜையின் போது இறைவனுக்கு இந்த மங்கல பொருட்களை வைத்து படைப்பது நல்லது..

    MORE
    GALLERIES

  • 77

    புதன்கிழமை விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் வெற்றி அடையும்... எப்படி தெரியுமா?

    வாழைப்பழம்: வாழைப்பழம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது. வாழைப்பழத்தை எப்போதும் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். வாழைப்பழத்தை எப்போதும் ஜோடியாகதான் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இது தவிர மற்ற பழங்களையும் பூஜையில் வைக்கலாம்.இதனால் கேட்டதை வழங்கிடுவார் விநாயகர் என்பது ஐதீகம்.

    MORE
    GALLERIES