ஜோதிடம் மற்றும் அறிவியல் ரீதியில் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஒரு வானியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகணங்கள் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 20 ஏப்ரல் 2023 அன்று நிகழ்ந்தது. இதையடுத்து, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் 14 அக்டோபர் 2023 அன்று நிகழ உள்ளது. இருப்பினும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது . இந்த கிரகணம் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தெரியும். இந்திய நேரப்படி, இரவு 8:34 முதல் நள்ளிரவு 2:25 வரை நிகழும். இந்த கிரகணம் சில ராசிகளை நேரடியாக பாதிக்கும். அந்தவகையில், எந்தெந்த ராசிக்காரர்கள் அசுப பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
மேஷம் : ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் சாதகமற்றதாகக் கருதப்படுகிறது. இந்த கால கட்டத்தில் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துரோகம் இழைக்கலாம். அதுமட்டும் அல்ல, உங்களின் உறவினர்கள் உங்களை பிரச்சனைகளில் சிக்க வைப்பார்கள். வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நல்லது.
ரிஷபம் : ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண இழப்பு, அவதூறு, பொருள் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம். இக்காலத்தில் ரிஷபம் ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.