பஞ்சாங்கத்தின் படி, சுக்கிரன் கிரகம் பிப்ரவரி 15 அன்று இரவு 8.12 மணிக்கு அதன் உச்ச ராசியான மீனத்தில் நுழைகிறது. அவர் மீன ராசியில் நுழைவதால் மாளவ்ய யோகம் உருவாகும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மீனத்தில் மாளவ்ய யோகம் உருவாகும். மாளவ்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மாளவ்ய ராஜ யோகம் எப்படி உருவாகிறது, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அது மிகவும் சுப பலன் தரும் என்பதை இண்டஹ் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீன ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் அரிதான 'மாளவியா மகாபுருஷ ராஜயோகம்' ஏற்படுகிறது. ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மாளவ்ய ராஜயோகம் என்றால், பஞ்சாங்கபடி மஹாபுருஷ ராஜயோகங்களில் மாளவ்ய ராஜயோகமும் ஒன்றாகும். இந்த யோகம் சுக்கிரனின் கேந்திரத்தால் உருவாகிறது. ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீட்டில் ரிஷபம், துலாம் அல்லது மீனம் ஆகிய இடங்களில் சுக்கிரன் அமைந்திருந்தால், இந்த ராஜயோகம் உருவாகும். ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பலன் தரும். பிப்ரவரி 15ம் தேதி முதல் இந்த ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..
மிதுன ராசி: சுக்கிரன் ராசியின் மாற்றம் மிதுன ராசியினருக்கு இனிமையாகவும் நன்மையாகவும் இருக்கும். சுக்கிரன் உங்களின் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால். இது வேலை, பணியிடம், வரவு செலவு என அனைத்திலும் நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்கள் இந்தக் காலத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம்.
கடகம்: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால். இது ஒரு அதிர்ஷ்டமான, வெளிநாட்டு இடமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமானது. மேலும், உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். மறுபுறம், மாணவர்கள் போட்டி தேர்வுகளில் இந்த நேரத்தில் வெற்றிபெற முடியும்.
தனுஷ்: சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஏற்படும் மாளவ்ய ராஜயோகம் தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும்.. ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. அரசியலில் தீவிரமாக இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்..
கும்ப ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் கும்ப ராசிக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த ராசியிலிருந்து சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு வருகிறார். பணத்தின் பிறப்பிடமாக இதை சொல்லலாம். இது உங்கள் நிதி நிலைமையை மிகவும் சிறப்பாக மாற்றும். இந்த நேரத்தில் உங்கள் செல்வம் பெருகும். மறுபுறம், நீங்கள் ஒரு அரசு ஊழியராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகளுக்கு நிலுவையில் உள்ள பாக்கிகள் கிடைக்கும்.