ஜோதிடத்தின் படி, சனியும் சூரியனும் தந்தை மகன் உறவைக் கொண்டுள்ளனர். இருப்பினும் இவ்விருவரும் எதிரிகளாவர். இதில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். அதே சமயம் சூரியன் மாதம் ஒருமுறை தனதுராசியை மாற்றக்கூடியவர். இதில் சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்தார். இந்நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்று சூரியன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.
சனியும், சூரியனும் ஒரே ராசியில் ஒன்றாக பயணிப்பதால், அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் மார்ச் மாதம் வரை இருக்கும். இதில் சில ராசிக்காரர்கள் நல்ல அமோகமான பலன்களையும், சிலர் அதிக பிரச்சனைகளையும் சந்திக்கலாம். இப்போது கும்பத்தில் நிகழவுள்ள சனி சூரிய சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் அதிக பலன்களை பெற போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேஷம்: வெளிநாட்டில் செல்ல விசா அல்லது பாஸ்போர்ட் சம்பந்தமான பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.. இனி அவை நீங்கும். இந்த காலம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இரத்த அழுத்தம், முழங்கால்கள், மூட்டுகள் அல்லது நரம்புகள் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.. அடுத்த 30 நாட்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யாது.பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது.
கும்பம்: இரும்பு, எஃகு, ஜிம் வேலை செய்பவர்கள் அடுத்த 30 நாட்களில் பல நன்மைகளைப் பெறுவார்கள். பணம் சம்பந்தமான விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். உங்களின் அரசுப் பணிகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதுவும் இந்தக் காலக்கட்டத்தில் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்கள் இரண்டு விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சனிக்கிழமை தோறும் கோவிலுக்குச் சென்று சனி பகவானை வணங்க வேண்டும்.