ஜாதகம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியப்பங்கு வகுக்கிறது. ஒருவரின் ஜாதகம் அவரின் வாழ்க்கையில் நிகழ் இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க உதவும். அதே போல, கிரக பெயர்ச்சியும் ஜாதகத்தில் நல்ல மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். சில கிரகங்களின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். அந்த வகையில், ராஜ யோகத்தால் கூடிய விரைவில் கேடீஸ்வரராக போகும் ராசிகள் பற்றி காணலாம்.
தன யோகம் எப்போது? : பிப்ரவரி 15, 2023 அன்று சூரியன் மீன ராசிக்குள் நுழைகிறார். இதையடுத்து, பிப்ரவரி 16 ஆம் தேதி சுக்கிரனும் மீன ராசிக்கு சஞ்சரிப்பார். ஏற்கனவே, மீனத்தில் குரு இருப்பதால், இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை நல்ல பலன்களை கொடுக்கும். சூரியனும் சுக்கிரனும் மீனத்தை கடந்து சென்ற பின், புதன் மீன ராசிக்குள் நுழைவார். இதனால், சில ராசிகளுக்கு ராஜ யோகம் நீடிக்கும்.
ராஜ யோகத்திற்கான கிரக சேர்க்கை : கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு நகர்ந்து கொண்டே இருக்கும். கிரகங்களின் நகர்வு நன்மை தரக்கூடிய ராஜ யோகத்தை உண்டாக்கும் அமைப்பாக மாறுகிறது. இதனால், சில ராசிக்காரர்களுக்கு நிதி, வேலை, தொழில் விஷயங்களில் வெற்றியை கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தனம் மற்றும் ராஜ யோகம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஜாதகத்தில் ராஜயோகம் உள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மட்டுமின்றி, உயர் பதவியும் அடைவார்கள்.
மகரம் : மகரத்திற்கு ஏழரை சனி நடந்தாலும், கிரகணங்களின் சேர்க்கை ராஜ யோகத்தால் நல்ல பலன்களை கொடுக்க உள்ளது. இதனால், உங்களின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். எண்ணெய், இரும்பு, தாதுக்கள், பெட்ரோலியம் தொடர்பான தொழிலை செய்பவர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
கன்னி : குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பாகும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உங்கள் மனைவியின் முழு ஆதரவு கிடைக்கும். கிரகங்களின் சேர்க்கையால் உங்களுக்கு சம்பளம், பதவி உயர்வுகள் ஏற்படும். உங்கள் துறையில் சாதனை புரிவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதி நிலைமை மேம்படும்.
மிதுனம் : மிதுனத்தில் 10 ஆம் வீட்டில் குரு, சூரியன், சுக்கிரன் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால், திடீர் பண வரவு, தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மேலும், பதவி உயர்வு கிடைப்பதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதை உண்டாகக்கூடிய ராஜயோக நிலை உருவாகும். இதனால், உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும்.