முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

Panguni Uthiram 2023 | பங்குனி உத்திரத் திருவிழாவை யொட்டி முருகன் கோயில்களில் திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  • 18

    பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

    திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுன் தங்கத்தேரில் எழுந்தருளினார்.

    MORE
    GALLERIES

  • 28

    பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடியில் வெற்றி ஆண்டவர் அய்யனார் கோயிலில் நேற்று இரவு தேரோட்டம் நடைபெற்றது. மா, பலா ,வாழை என முக்கனிகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீற்றிருக்க, நூற்றுக்கணக்கான மக்கள் அரோகரா முழக்கத்துடன் இழுத்தனர்.

    MORE
    GALLERIES

  • 38

    பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

    தலைவாசல் அருகே நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ காமநாதீஸ்வரர் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த் திருவிழா நடைபெற்றது. பொதுமக்களின் பங்களிப்புடன் பல இலட்சரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய தேரில் ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ காமநாதீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் சுவாமிகள் எழுந்தருளினார்.

    MORE
    GALLERIES

  • 48

    பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

    இதேபோல, திருமயம் அருகே கண்ணங்காரக்குடியில் உள்ள பூரண புஷ்கலை சமேத தர்மசாஸ்தா கோவில் பங்குனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    MORE
    GALLERIES

  • 58

    பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

    கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி ஜெயநகரத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. நான்கு முக்கிய வீதிகளின் வழியாக மக்களின் ஆட்டம் பாட்டத்துடன் மங்கள இசை முழங்க தேர் வலம் வந்தது. ரத வீதிகளில் கூடிய மக்கள் தேங்காய் உடைத்தும் அர்ச்சனை செய்தும் முருகனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

    MORE
    GALLERIES

  • 68

    பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

    தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் சட்டத்தில் இழுக்கப்பட்டு நிலையை வந்து அடைந்தது. இரண்டாவதாக வைரத் தேர் என்று அழைக்கப்படும் பெரிய தேரில் கழுகாசல மூர்த்தி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 78

    பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

    வைரத் தேர் இரண்டு நிலையாக இழுக்கப்படுவது வழக்கம். காலையில் முதல் நிலை வரை தேர் இழுக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு இரண்டாவது நிலை வரை இழுக்கப்படும். பலத்த மழை பெய்த நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் தேர் திருப்பட்டு இரவு 10 மணிக்கு தோரோட்டம் நிறைவு பெற்றது.

    MORE
    GALLERIES

  • 88

    பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!

    காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ நடன காளியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவையொடி தீமிதி திருவிழா நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடன காளியம்மன் தீக்குழி அருகே எழுந்தருளிய நிலையில், 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    MORE
    GALLERIES