முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!

திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!

Tirupati | திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டது. அது இன்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. (செய்தியாளார்: புஷ்பராஜ், திருப்பதி)

  • 16

    திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!

    திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் இன்று முதல் புதிய நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையின் அடிப்படையில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உரிய ரசீதுகளை பக்தர்கள் வாங்கும்போது பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி மூலம் பக்தர்களின் முகம் அங்குள்ள வெப்கேம் மூலம் படம் பிடிக்கப்பட்டு தேவஸ்தான சர்வரில் சேமித்து வைக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 26

    திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!

    அறைகளை காலி செய்யும் போதும் அதே பக்தர் கவுண்டருக்கு நேரடியாக சென்று அறைகளை காலி செய்ய வேண்டும். ஆனால் அறைகளை ஒதுக்கீடாக பெற்றவர் ஒருவராகவும் காலி செய்தவர் மற்றொருவாராகவும் இருந்தால் டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது.

    MORE
    GALLERIES

  • 36

    திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!

    திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இடைத்தரகர்கள் அறைகளை வாங்கி கொடுக்கின்றனர். பக்தர்கள் திருமலைக்கு வந்து சேர்வதற்கு முன்னதாகவே அறைகளை வாங்கி வைக்கும் இடைத்தரகர்கள் அதற்குரிய கூலியையும் பெற்று கொள்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 46

    திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!

    சாமி கும்பிட்ட பின் பக்தர்கள் அறைகளை காலி செய்து சென்று விடுகின்றனர். இனிமேல் இதுபோல் அறைகளை வாங்கியவர் ஒருவராகவும்,காலி செய்தவர் மற்றொருவராகவும் இருந்தால் டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது.

    MORE
    GALLERIES

  • 56

    திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!

    பக்தர்கள் அறைகளை காலி செய்ய செல்லும்போது அந்த கவுண்டரில் இருக்கும் வெப்கேம் மூலம் முகம் படம் பிடிக்கப்பட்டு தானியங்கி முறையில் அறையை வாங்கியவரும், காலி செய்தவரும் ஒருவரா என்பது தானியங்கி முறையில் சரி பார்க்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 66

    திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!

    இரண்டு முகங்களும் ஒருவருடையது ஆக இருந்தால் டெபாசிட் பணத்தை திருப்பி கொடுக்க கம்ப்யூட்டர் ஓகே செய்து விடும். ஆனால் இரண்டு முகங்களும் வேறு வேறு நபர்களுக்கு சொந்தமானதாக இருந்தால் டெபாசிட் பணத்தை திருப்பி கொடுக்க கம்ப்யூட்டர் நோ சொல்லிவிடும். இந்த முறை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES