வேத ஜோதிடத்தின்படி, அசுரர்களின் அதிபதியான சுக்கிரன் மிதுன ராசியிலும், சனியும் கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். இந்த சூழ்நிலையில் நவபஞ்சம் மகாயோகம் உருவாகிறது. ஜோதிட நம்பிக்கையின் படி சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அபூர்வ யோகம் உருவாகிறது. இந்த அபூர்வ சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள். அந்தவகையில், பல்வேறு அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
நவபஞ்சம் யோகம் என்பது என்ன / எப்படி உருவாகிறது : நவபஞ்சம் மகா யோகம் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று முக்கோணத்தில் அமைந்தால் உருவாகும். இதற்கு ராஜயோகம் என்று பெயர். அதாவது, இரு கோள்களுக்கு இடையே உள்ள தூரம் 120 டிகிரியாக இருக்கும் போது நவபஞ்சம் யோகம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த யோகத்தில் ஒரே ஒரு அங்கம் தான் உருவாகும் என கூறப்படுகிறது. அதாவது, 1-5-9 என்ற (மேஷம்-சிம்மம்-தனுசு) நெருப்பு ராசி, 2-6-10 (ரிஷபம்-கன்னி-மகரம்) பூமி ராசி, 3-7-11 (மிதுனம்-துலாம்-கும்பம்) காற்று ராசி. 4-8-12 (கடகம்-விருச்சிகம்-மீனம்) நீர் ராசிகளில் உருவாகிறது. அதேபோல், நக்ஷத்ர சக்கரத்திலிருந்தும் அறியலாம்.
மேஷம் : உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் சிறப்பாக நடந்து முடியும். வியாபாரத்திலும் மகத்தான வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும். உங்கள் துணையுடன் நல்ல நேரத்தையும் செலவிடுங்கள். தொழில் சம்மந்தமான முடிவுகள் எடுப்பதற்கு இது ஏற்ற காலம்.
ரிஷபம் : உங்கள் ராசியில் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால், வேலை மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்கள் கைக்கு கிடைக்காமல் இருந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்திலும் மகத்தான வெற்றி கிடைக்கும்.