அதே சமயம், கிரகங்களின் இணைவுகளும் நம் வாழ்வில் ஆழமாக விளைவுகளை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வேலை வாய்ப்பு, பண வரவு, தொழில் லாபம் போன்ற பலன்களை பெறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.
மேஷம் : மேஷ ராசிக்காரர்களின் மூன்றாம் வீட்டில் செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கை நிகழும். எனவே, நீங்கள் புதிய வீடு, வாகனங்கள் வாங்குவீர்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நிதி பிரச்சனைகள் இருக்காது. நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், நல்ல பலனை பெறுவார்கள்.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களின் இரண்டாம் வீட்டில் செவ்வாய் - சுக்கிரன் இணைவு ஏற்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பல்வேறு நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து முழு ஆதரவையும் பெறுவார்கள்.ங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியால் நிரப்பப்படும். பொருளாதார ரீதியாக உங்களை நிலைநிறுத்திக் கொள்வீர்கள்.
கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பத்தாம் வீட்டிலும் செவ்வாய் எட்டாவது வீட்டிலும் சஞ்சரிக்கிறார். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். இதனால், உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு என பல சுப நன்மைகளை பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க இதுவே உகந்த நேரம்.
துலாம் : செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சஞ்சாரத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் அடைவார்கள். பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை பொது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. இதை நியூஸ்18 உறுதிப்படுத்தவில்லை