திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜைக்கு அணிவிக்க வழங்கப்பட்ட தங்க அங்கி ஊர்வலம் இன்று காலையில் தொடங்கி உள்ளது. மண்டல பூஜை நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் ஆறன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து தொடங்கியது. வரும் 26 அன்று மாலை தீபாராதனைக்கு முன்னதாக தங்க அங்கி ரத ஊர்வலம் சன்னிதானம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.