உளவியலின் படி, எதிர்காலத்தில் நடக்கும் சில விஷயங்கள் நம் கனவில் வரும். அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால்... வரப்போகும் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் என்பது ஐதீகம். சில சமயங்களில் அந்த கனவுகள் சுப அறிகுறிகளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமான் கனவில் முன்கூட்டியே அறிவுரைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.
இந்து நாட்காட்டியின் படி, மகாசிவராத்திரி, மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாசிவராத்திரி பிப்ரவரி 18, சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தேதியில் ருத்ராபிஷேகம் செய்வதால், சிவபெருமான் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். விரதம், வழிபாடு, விழிப்பு, சிவ நாமத்தை தியானம் செய்தல் ஆகியன சிவனின் அருளைப் பெறச் செய்யும். மஹாசிவராத்திரிக்கு முன்பு வரும் சில கனவுகள் நல்ல நிகழ்வுகளைக் குறிக்கின்றன. இந்த கனவுகள் உங்களுக்கு சிவபெருமானின் ஆசிகள் இருப்பதைக் குறிக்கிறது. மகாசிவராத்திரிக்கு முன்பு வரும் கனவுகள் மகிழ்ச்சியை தரும்.
திரிசூலம்: சிவன் எப்போதும் திரிசூலம் வைத்திருப்பார். திரிசூலத்திற்கு 3 விளிம்புகள் உள்ளன. அவை காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றைக் குறிக்கின்றன. படைப்பின் ஒற்றுமையை நிலைநாட்ட சிவபெருமான் திரிசூலத்தைப் பயன்படுத்துகிறார். மஹாசிவராத்திரியின் போது இந்த கனவு வந்தால், மகாதேவன் உங்கள் எல்லா கஷ்டங்களையும் அழிக்கப் போகிறார் என்று அர்த்தம்.
உடுக்கை: புராணங்களின்படி.. சிவபெருமான் 14 முறை உடுக்கை வாசித்தார். அதன் பிறகு படைப்பில் ராகங்களும் தாளங்களும் பிறந்தன. எனவே மஹாசிவராத்திரி அன்று உடுக்கையை தரிசிப்பது மிகவும் சிறப்பானது. உடுக்கையின் கனவு வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. இந்த கனவு உங்கள் வீட்டில் திருமணம் நடக்க போவதை குறிக்கும் அடையாளம்.