முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

Shivratri 2023 | சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் போது அவருக்கு உகந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். எந்த மலர் வழிபாடு என்ன பலனை தரும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  • 112

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்தமான பூ இருக்கும். தாமரை மலரால் மட்டுமே லட்சுமி தேவியை பூஜை செய்கிறார்கள். கிருஷ்ணருக்கு துளசி உகந்ததாக உள்ளது. விநாயகருக்கு அருகம்புல் என்றால் மிகவும் பிடிக்கும். அதுபோலவே சிவபெருமானுக்கும் பல மலர்கள் பிடிக்கும். அவை என்னென்ன மலர்கள் என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 212

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    எந்த ஒரு சிவவழிபாடு செய்யும் போதும் வில்வ இலை இல்லாமல் அந்த வழிபாடு முழுமை அடையாது என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. பிரம்மனால் வில்வமரம், லக்ஷ்மியின் வலது திருக்கரத்தில் இருந்து உருவாக்கப்பட்டது என்று கூறுவது உண்டு. சிவ வழிபாட்டில் வில்வ இலை இடம் பெற்றால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    MORE
    GALLERIES

  • 312

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    தும்பை: சிவபெருமானை பிரார்த்திக்கப் பயன்படும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. தும்பை பூவை வைத்து சிவபெருமானை வழிபடுவது உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும் என்றும் பாவங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 412

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    செம்பருத்தி பூ: ஆயிரம் செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை சிவபெருமானுக்கு வைத்து வழிபட்டால் அவர்கள் மரணத்திற்கு பிறகு கைலாயத்தில் வாழும் வாய்ப்பை பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது. இந்த பூவை வைத்து வழிபடுபவர்கள் வாழும்போதே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 512

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    எருக்கம் பூ: சிவபெருமானை எருக்கை மலர் கொண்டு வழிபடுபவர்கள் அவர்கள் செய்த முன் ஜென்ம பாவங்களில் இருந்து மன்னிக்கப்படுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாக செய்த பாவங்களும் இந்த மலரைக் கொண்டு சிவபெருமானை வழிபடும்போது மன்னிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 612

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    தாமரை பூ: சிவபெருமானிடம் இருந்து செல்வத்தை பெற விரும்புபவர்கள் தாமரை மலரை வைத்து வழிபடலாம். வெள்ளை, பிங்க், நீலம் என பல மலர்களில் தாமரை இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபடுவதற்கு நீல தாமரை மிகவும் உகந்ததாகும்.

    MORE
    GALLERIES

  • 712

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    அரளி பூ: சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பூவை வைத்து சிவனை வழிபடலாம். வெள்ளை அரளி மலரை வைத்து சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்தமான மனைவி கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை.

    MORE
    GALLERIES

  • 812

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    ஊமத்தம் மலர்: மஹாசிவராத்திரி அன்று சிவலிங்கத்தின் மீது இந்த ஊமத்தம் மலர்களை கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் விஷ ஜந்துக்களின் ஆபத்து நீங்கும். கண் நோய்கள் நீங்கும். இந்த மலர்களை வைத்து வழிபடுவது சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.

    MORE
    GALLERIES

  • 912

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    ரோஜா : சிவபெருமானை ரோஜா மலர்களை கொண்டு வழிபடுவது பத்து வருடம் செய்த யாகத்திற்கு சமம் என்று புராணம் கூறுகிறது. எட்டு ரோஜா மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபடுபவர்கள் கைலாச பதவியை பெறுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 1012

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    சிவ வழிபாட்டுக்கு எப்போதுமே தனித்துவமும் மகத்துவமும் உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் சிவனாரை உரிய மலர்கள் சூட்டி வழிபடுவது நல்ல மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தருளும் என்கிறார்கள் ஜோதிடர்கள்

    MORE
    GALLERIES

  • 1112

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    சித்திரை மாதத்தில் சிவ வழிபாடு செய்யும்போது, பலாசம் எனும் ஒருவகை மலரைக் கொண்டு அர்ச்சித்து வழிபடுவது குடும்பத்தில் ஒற்றுமையையும் நிம்மதியையும் கொடுக்கவல்லது என்பார்கள். வைகாசி மாதத்தில் புன்னையும் ஆனி மாதத்தில் வெள்ளெருக்கும் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். ஆடி மாதத்தில் அரளி சார்த்தி, சிவனை வழிபடுவது சிறப்புக்கு உரியது. ஆவணி மாதத்தில் செண்பக மலர்கள் கொண்டு அர்ச்சிப்பதும் அலங்கரிப்பதும் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் என்பது ஐதீகம்.

    MORE
    GALLERIES

  • 1212

    மகா சிவராத்திரி 2023: சிவபெருமானை இந்த மலர்களால் வழிபட்டால் ஜென்ம பாவங்கள் விலகும்..!

    புரட்டாசி மாதத்தில், கொன்றைப் பூக்களும் ஐப்பசி மாதத்தில் தும்பைப் பூக்களும் கொண்டு சிவலிங்கத் திருமேனியை அர்ச்சித்து வழிபட்டால், தொழில் ஸ்தானமும் உத்தியோக ஸ்தானமும் வலுப்பெறும். கார்த்திகை மாதத்தில் கத்திரிப்பூவும் மார்கழி மாதத்தில் பட்டி எனும் ஒருவகைப் பூவும் கொண்டு சிவபெருமானுக்குச் சூட்டி வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். தை மாதத்தில், சிவபெருமானுக்கு தாமரை மலர்கள் கொண்டு அலங்கரிப்பதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லது .

    MORE
    GALLERIES