ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். குரு நல்ல நிலையில் இருந்தால், அவர் பார்வை விழும் ராசியினருக்கு அதீத செல்வத்துடன் செழிப்பான வாழ்க்கையையும் வழங்குவார். குரு இருக்கும் வீட்டில் மற்ற கிரகம் இணைவதால் யோகங்கள் மங்களகரமான யோகங்கள் உருவாகிறது.
மேஷம் : வியாழன் உதயத்தால் உருவான மகா தன ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக் பல அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. ஏனென்றால், குரு பகவான் உங்கள் சொந்த ராசியிலேயே குரு உச்சம் பெற்றுள்ளார். எனவே, உங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவார்கள்.
கடகம் : மகா தன ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களும் அற்புத பலன்களை பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவும், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். உங்களுக்கு சனியின் தாக்கம் இருப்பதால், நீங்கள் சற்று ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனி பகவானை வணங்குவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தனுசு : மகா தன ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நற்பலன்களை பெறுவார்கள். திருமணமானவர்கள் குழந்தை குறித்த நல்ல செய்திகளை பெறுவார்கள். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். நீண்ட காலமாக நிலம், வீடு, வாகனம் வாங்க நினைத்தால் இது சரியான நேரம். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தை பார்ப்பீர்கள்.