இந்து ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல் சந்திர கிரகணமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி புத்த பூர்ணிமா அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், சந்திர கிரகணத்திற்கு முன் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. அதாவது, ராகுவும் குருவும் ஒரே ராசியில் சந்திக்கும் போது கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகும். இதனால், சில ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். லட்சுமி தேவியின் பார்வை உங்கள் மீது விழுவதால், நிதி நிலைமை மேம்படும். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடக ராசி: கஜலக்ஷ்மி ராஜயோகத்தின் தாக்கத்தால் கடக ராசியினருக்கு மிகவும் சாதகமான காலமாக கூறப்படுகிறது. எதிர்பாராத வகையில் பெரிய அளவில் பணம் வந்து சேரும். தொழில்முனைவோருக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாகும். மேலும், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்களின் நிதிநிலைமை மேம்படும். இதுவரை, நீங்கள் சந்தித்துவந்த உடல்நலக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
கன்னி: கஜலக்ஷ்மி ராஜயோகத்தின் தாக்கத்தால் கன்னி ராசிகாரர்களுக்கு மிகவும் சாதகமான மாதம் இது. நீங்கள் நினைத்த அனைத்து காரியமும் வெற்றிகரமாக நடைபெறும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக பலமாக இருப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மரியாதை கூடும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.