முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

ஜோதிடத்தின் படி, நாம் காணும் கனவுக்கு சில அர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது. அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அப்படி உங்கள் கனவில் காடு வந்தால் என்ன அர்த்தம் என பார்க்கலாம்.

  • 19

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவு வரும். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டவையாகவும் இருக்கலாம். இந்த கனவு ஏன் எனக்கு வந்தது என நீங்கள் பலமுறை யோசித்திருப்பீர்கள். ஆனால், ஸ்வப்ன சாஸ்த்திரத்தின்படி நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, நமது நிஜ வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு காடு குறித்த கனவு வந்தால் என்ன அர்த்தம் என இங்கே காணலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    உங்கள் கனவில் காட்டு வன விலங்குகளைக் கண்டால், அது நல்லது அல்ல. அவை, ஏமாற்றத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. அதுமட்டும் அல்ல, நோய்களின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, நிஜ வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்தவும்.

    MORE
    GALLERIES

  • 39

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    நீங்கள் கனவில் தனியாக நடந்து செல்வதை கண்டால், அது நல்ல சகுனம். வரும் காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் காட்டில் சுற்றித் திரிவதை போலவோ அல்லது விளையாடுவதை போல கனவு கண்டால், உங்களுக்கு தேவையான ஒன்றை தேடுகிறீர்கள் என அர்த்தம்.

    MORE
    GALLERIES

  • 49

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    மரக்கன்றுகள் நிறைந்த பசுமையான காடுகளை உங்கள் கனவில் கண்டால், அது நல்ல அறிகுறியாகும். இது உங்கள் வாழ்க்கையின் பசுமையை குறிப்பிடுகிறது. உங்கள் நிஜ வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். நீங்கள் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, உங்கள் நிதி நிலைமை விரைவில் மேம்படும் என்பதையும் குறிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 59

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    உங்கள் கனவில் நீங்கள் வெட்டப்படும் காடுகளை கண்டால், உங்களுக்கு புதிய பிரச்னைகள் ஏற்படப்போகிறது என அர்த்தம். அதுமட்டும் அல்ல, உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. உங்களுக்கு ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 69

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    ஒற்றையடி பாதையுடைய காடை உங்கள் கனவில் கண்டால், அது சுப அறிகுறி. நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். பணி வாழ்க்கையில், நல்ல ஆதரவை பெறப்போகிறீர்கள் என அர்த்தம். நீங்கள் தொட்ட எல்லா விஷயத்திலும் வெற்றி காண்பீர்கள் என கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    உங்கள் கனவில் பசுமையான அடர்ந்த காடு வந்தால், அது நல்ல அறிகுறியாகும். அதுமட்டும் அல்ல, விரைவில் நீங்கள் உங்கள் எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபடப்போகிறீர்கள் என அர்த்தம். அதே நேரத்தில் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கை கதவை தட்டும். உங்கள் குடும்பம் செழிப்பதற்கான அறிகுறியாகும். தொழிலில் பதவி உயர்வு, உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 89

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    காட்டில் தனிமையாக சிக்கிக்கொள்வதை போல கனவு கண்டாலோ அல்லது காட்டு விலங்குகள் உங்களைத் தாக்குவதை போல கனவு கண்டாலோ அது அசுப அறிகுறிகளாக கருதப்படுகிறது. உங்களின் நிஜ வாழ்க்கையில், பெரிய சிக்கலில் சிக்குவதற்கான அறிகுறியாகும். உங்கள் பெற்றோருடன் தொடர்புடைய சோகமான செய்திகளை நீங்கள் கேட்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.

    MORE
    GALLERIES

  • 99

    காட்டில் தனியாக சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் நல்லதா?... கெட்டதா?.. இதோ பலன்கள்!

    காடு எறிவது போன்ற கனவு கண்டால், அது நல்ல அறிகுறியாகும். உங்கள் நிஜ வாழ்க்கையில் நீண்ட நாளாக இருக்கும் பிரச்னைகள் விரைவில் தீரப்போகிறது என அர்த்தம். அதுமட்டும் அல்ல, உங்கள் பழைய பிரச்னைகள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

    MORE
    GALLERIES