முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

temple for children | இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பெரிய நாடு. இங்கு அதிமான கோயில்கள் உள்ளது. எண்கள் மட்டும் செல்லக்கூடியது, ஆண்கள் மட்டும் செல்ல கூடியது, சட்டை அணியாமல் செல்வது என பல விசித்திரமான கோயில்கள் உள்ளனர். இந்தியாவில் குழந்தைகள் மட்டும் செல்ல கூடிய ஒரு விசித்திர கோயில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?.

  • 17

    இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

    நாட்டில் பல கோவில்களை சுற்றி பல நம்பிக்கைகள் உள்ளன. சில கோவில்களில் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருப்போம், சில கோயில்களுக்கு ஆண்களை அனுமதிப்பதில்லை, சில கோயில்களில் ஆடை அணியாமல் செல்ல வேண்டும் என பல விசித்திரமான கோயில்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ள கோயில் பற்றி உங்களுக்கு தெரியுமா?.

    MORE
    GALLERIES

  • 27

    இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

    உத்தரகாண்ட் பல பழங்கால மதத் தளங்களைக் கொண்டுள்ளது. இதனால், இதை தேவபூமி என்று அழைக்கின்றனர். இங்குள்ள மலைப் பகுதிகளில் பல வகையான தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இங்குள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தலைவர் என்று ஒருவர் இருப்பார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பழமையான கோவில் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 37

    இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

    அதில் உள்ள விக்கிரகங்கள் பல வடிவத்தை கொண்டிருக்கும். அப்படி ஒரு கிராமத்தில் குழந்தைகள் மட்டுமே வழிபடும் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு பெரியவர்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த கோயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

    சீன எல்லைக்கு அருகில் உள்ள பித்தோராகர் (District Pithoragarh) என்ற இந்திய எல்லை மாவட்டத்தில் உள்ள தந்து (Dantu Village) என்ற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பள்ளி படிக்கும் குழந்தைகள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் இதற்கு வித்யா மந்திர் என்று பெயர்.

    MORE
    GALLERIES

  • 57

    இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

    இங்கு வரும் குழந்தைகள் தங்களின் வாழ்வில் வெற்றி பெற பிரார்த்தனை செய்வார்க்கலாம். அதுமட்டும் அல்ல, இங்கு என்ன பிரார்த்தனை செய்தாலும் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

    இந்த கோவிலுக்கு பிற வயதுடையவர்கள் செல்வதில்லை. இது உத்தரகாண்ட் மாநிலத்தில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட ஒரே கோவில் என்பதால் அதன் அடையாளமே இந்த கோவிலின் தனித்துவத்தை கூறுகிறது. தொலைதூரத்தில் வசிக்கும் மாணவர்கள் கூட படிப்பை முடிப்பதில் சிரமம் இருப்பதால், இங்கு வந்து வழிபடுவார்கள் என்று உள்ளூர் கிராமவாசிகள் கூறுகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    இந்தியாவில் இருக்கும் இந்த கோயிலில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதியாம்.. ஏன் தெரியுமா?

    குழந்தைகள் வித்யா மந்திரில் நல்ல கல்வி பெற பிரார்த்தனை செய்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போது தினமும் இந்த கோவிலுக்கு சிறுவர்கள் வந்து பூஜை செய்வது வழக்கம் என்று கூறுகின்றனர். இந்த கட்டுரை பொது நம்பிக்கை மற்றும் இணையத்தில் கிடைத்த தகவல் வைத்து எழுதப்பட்டது. இதை நாங்க உறுதிப்படுத்தவில்லை.

    MORE
    GALLERIES