அதிகாலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை: உங்களின் பிறந்த நேரம் 12 AM முதல் 12 PM-க்குள் இருந்தால் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்களாம். உலக நடப்புகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். தற்பெருமை இல்லாதவர்கள். எந்த ஒரு புதிய விஷயத்தையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறன் உடையவர்கள். மற்றவர்களுடன் நெருக்கமாக பலகாவிட்டாலும், மிகவும் அன்பானவர்கள். மற்றவர்களிடம் மிகவும் நேர்மையாக இருப்பார்களாம்.
அதிகாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரை: இந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறந்தவர்கள் மென்மையானவர்கள் மற்றும் ஆடம்பரமாக வாழ விரும்புபவர்கள். இவர்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக காணப்படுவார்கள். சொல்லை விட, செயல்படுத்தி காட்டுவதில் வல்லவர்கள். இயற்கையை அதிகமாக நேசிப்பவர்கள். நீங்கள் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் பிறந்திருந்தால், இளமையில் அதிஷ்டமானவர்களாக இருப்பார்களாம்.
அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை: அதிகாலை 4 மணி முதல் 6 AM-க்குள் பிறந்தவர்கள் வலிமையான ஆளுமை கொண்டவர்கள். அதீத நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் சவால்களை சந்திக்க சிறிதும் தயங்காதவர்கள். தனக்கான விஷயத்தில் அதிக கவனம் செலுத்துபவர்கள். நேர்மையான மற்றும் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள். தனது மனதில் இருப்பதை பட்டென பேசும் குணம் உள்ளவர்கள்.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை: இந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறந்தவர்கள், பிறப்பிலே தலைவர்களாகவும் சிறந்த ஆளுமையுடனும் காணப்படுவார்கள். எவ்வளவு கடினமான பாதையாக இருந்தாலும் அதை தன்னம்பிக்கையுடன் கடக்கும் திறன் உள்ளவர்கள். அடிக்கடி கோவப்படும் குணம் உள்ளவர்கள். எனவே, தங்களை அமைதியாக வைக்க அடிக்கடி முயற்சி செய்வார்கள்.
காலை 8 மணி முதல் 10 மணி வரை: காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பிறந்தவர்கள், மிகவும் அமைதியானவர்கள். எனவே, மோதலை தவிர்க்க எல்லா வழிகளையும் செய்வார்கள். ஆனால், தனக்கு தேவையானதை பெறுவதில் மிகவும் பிடிவாதமாக இருப்பவர்கள். மற்றவர்களின் தேவையிலும் அக்கறை காட்டுவார்கள். மிகவும் நட்பானவர்கள், அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்கள்.
காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை: நீங்கள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள் பிறந்தவராக இருந்தால், மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்களாம். அதுமட்டும் அல்ல, மனதில் எதையும் வைக்காமல் வெளிப்படையாக பேசுவார்களாம். சுய ஒழுக்கம் மற்றும் அதிக உணர்திறன் உடையவர்கள். தன்னுடைய பலம் மற்றும் பலவீனம் குறித்து நன்றாக அறிந்திருப்பார்கள். பிறப்பிலேயே தலைவர்கள். கலைத் துறையில் சிறந்து விளங்குபவர்கள்.