முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

amarnath cave | ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். நாம் வழிபடும் சிவன் கோவில்கள் நமது ஊர்களில் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்படி அமர்நாத்தில் உள்ள அதிசயம்தான் என்னென்ன?

  • 17

    அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

    காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை ஜூன் 30-ந் தேதி தொடங்குகிறது. கவர்னர் மனோஜ் சின்கா தலைமையில் நடந்த அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 27

    அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

    43 நாட்கள் யாத்திரை நடக்கிறது. வழக்கம்போல், ரக்ஷாபந்தன் பண்டிகையன்று யாத்திரை முடிவடையும். கொரோனா கட்டுப்பாடுகளுடன் யாத்திரை நடைபெறும் என்று ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 37

    அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

    அமர்நாத் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

    சிவனுக்கு இருக்கும் பல கோவில்களில் அமர்நாத் கோவில் உலக புகழ் பெற்றது. அமர்நாத் பயணம் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு செல்லும் வரை வழியில் நிறைய நிறுத்தங்கள் உள்ளன. அழிவே இல்லாத சிவபெருமானின் ரகசியங்களை பார்வதி தன்னிடம் கூற வேண்டி வலியுறுத்திய போது, இந்த குகையை நோக்கி பயணிக்க சிவபெருமான் முடிவெடுத்தார்.

    MORE
    GALLERIES

  • 57

    அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

    குகைக்கு செல்லும் வழியில் அவர் செய்த சில விஷயங்கள் பக்தர்களுக்கு மிக விசேஷமாக இன்றும் இருக்கின்றது. இதனால் குகைக்கு செல்லும் பாதையில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு புராணக்கதை உள்ளது. புராணப்படி இந்த குகையை அடைய சிவபெருமான் பஹல்காம் பாதையில் பயணித்தார்.

    MORE
    GALLERIES

  • 67

    அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

    பலரும் கால்நடையாக அல்லது குதிரைகளின் உதவியுடன் பனிலிங்கத்தை தரிசிக்க சென்று வருகின்றனர். மிக ரம்யமான இந்த திருக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 77

    அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...

    பனிமயமான சிவலிங்கத்தின் இடது பக்கத்தில் இரண்டு சிறிய பனிக்கட்டிகள் உருவாகின்றன. இவை அன்னை பார்வதி மற்றும் விநாயகரின் சின்னங்கள் என்று கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES