ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் 1801ஆம் ஆண்டு இந்த கோட்டையை கைப்பற்றினர். பின்பு அவர்களிடம் இருந்து மருது சகோதரர்கள் இந்த கோட்டையைக் கைப்பற்றினர். ஆயினும் மீண்டும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர் இந்த கோட்டையை கைப்பற்றி இடித்தனர். அவ்வாறு இடித்தது போக எஞ்சியிருக்கும் கோட்டையின் பகுதிகளே இப்போது காட்சியளிக்கின்றன.