அது மட்டுமல்லாமல், உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜர் சிலை கொண்ட மங்களநாதர் சிவன் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி, ஆதிஜெகநாத பெருமாள் கோவில், தேவிப்பட்டினம் நவபாஷண நவக்கிரக கோயில், முன்னாள் குடியரத்தலைவர் அப்துல் கலாம் நினைவிடம், தனுஷ்கோடி என ஏராளமான இடங்களுக்கு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். எனவே, ராமநாதபுரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக இருந்து வருகிறது.
இதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு 36 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில், கடற்படை விமான தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்க இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இதனால், சுற்றுலா பயணிகளும் ராமநாதபுரம் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.