நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த ஊர் இதுதானா..! - எந்த மாவட்டத்தில் இருக்கிறது தெரியுமா?
Actor Senthil | தமிழ் சினிமாவில் இணைந்து கலக்கிய காமெடி நடிகர்களுள் கவுண்டமணி-செந்தில் முக்கிய இடத்தைப் பெற்றவர்கள். அவர்களுள் செந்தில் பிறந்த ஊர் மற்றும், அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையில் அசத்தி மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த காமெடியன்களாக கவுண்டமணி-செந்தில் ஆகியோர் திகழ்கின்றனர். இவர்களுடைய காமெடி பட்டிதொட்டி எங்கும் பரவி பட்டைய கிளப்பியுள்ளது.
2/ 11
அந்த வகையில், கவுண்டமணியுடன் இணைந்தும், தனியாகவும், மற்ற சிலருடன் இணைந்தும் காமெடிகளில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தவர் செந்தில். இவர் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில்.
3/ 11
கவுண்டமணியும் சேர்ந்து, அப்பாவியாகவும், குசும்புத்தனத்துடனும் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை. அத்துடன் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் சென்தில்.
4/ 11
1951ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்ம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூரில் பிறந்தவர் செந்தில். இவருடைய தந்தை ராமமூர்த்தி. செந்திலுக்கு முனுசாமி என்று பெயர் வைத்தார். அவருக்கு உடன் பிறந்தவர்கள் 6 பேர். அவர்களுள் செந்தில் 3 வதுதாக பிறந்தவர்.
5/ 11
5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த செந்தில், தந்தை அவரை திட்டியததால், ஆத்திரத்தில் தனது 12 ஆவது வயதில் ஊரை விட்டு ஓடி வெளியேறினார். பிறகு என்ன செய்வது என்று தெரியாத அவர், முதலில், ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
6/ 11
அங்கிருந்தும் அவருக்கு அலுப்பு தட்டியதால், பின்னர் ஒரு மதுக்கடையில் வைலைக்கு சேர்ந்தார். இப்படியாக பல வேலைகளை செய்த அவர், பின்னர் நாடகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது திறமைகளை வளர்த்தார்.
7/ 11
செந்தில் தனது அசாத்திய நடிப்பு மற்றும் காமெடி திறமைகளை பார்த்தவர்கள் திரையுலகத்தில் நுழைய உதவினர். அதன்படி சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
8/ 11
பின்னர், செந்தில் நடித்த மலையூர் மம்பட்டியான் படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது, செந்திலின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பரவியது.
9/ 11
இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து, தனது சொந்த ஊரான இளஞ்செம்பூருக்கு சென்று பெற்றோரை சந்தித்து மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தார். சிறுவனாகச் சென்று நடிகராகத் திரும்பிய செந்திலை, சொந்த ஊரைச் சேர்ந்தோரும், குடும்பத்தாரும் ஆரத்தழுவி மகிழ்ந்தனர்.
10/ 11
அதைத்தொடர்ந்து, 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார் செந்தில். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
11/ 11
தமது நடிப்பால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை சிரிப்பை ஏற்படுத்தி, மனதை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவி வருகிறார் ராமநாதபுரம் தந்த இந்த நடிகர்.