தொண்டியில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாத சுவாமி திருக்கோயிலில் நடந்த 1008 திருவிளக்கு பூஜை...
Ramanathapuram | தொண்டி அருகே திருவெற்றியூரில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாத சுவாமி திருக்கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 1008 திருவிழக்கு பூஜை நடைபெற்றது. (செய்தியாளர்: பொ. வீரக்குமரன், தொண்டி)
இ மாவட்டம் தொண்டி அருகே திருவெற்றியூரில் உலக பிரசித்தி பெற்ற சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மீகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.
2/ 5
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும் பிரத்தனைகளும் நடைபெறும். குறிப்பாக செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் வெளி மாநிலத்தில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு செல்லுவர்.
3/ 5
இது போல நேற்று இரவு ஆடி வெள்ளியை முன்னிட்டு 1008 திருவிழக்கு பூஜை நடைபெற்றது.
4/ 5
சுற்றுவட்டாரத்தில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5/ 5
விளக்குப்பூஜையை பெண்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியுடனும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.