முகப்பு » புகைப்பட செய்தி » புதுக்கோட்டை » பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் இருக்கும் தேனிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் இயற்கை அழகும், சுனையும் கொண்ட அற்புதமான இடமாகும்.

  • 111

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து காரையூர் வழியாக புதுக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பசுமை நிறைந்த மலை கிராமம். இந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அங்கிருக்கும் தேன் கூடுகளைக் கொண்ட மலையில் அழகுற அந்துள்ளது சுப்பிரமணியசுவாமி கோவில்.

    MORE
    GALLERIES

  • 211

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    இந்த மலையின் உச்சியில் தேனீக்கள் பெரிய தேன்கூடுகளைக் கட்டுவது வழக்கம். ஆனால், இப்பகுதி மக்கள் அந்த தேன் கூடுகளை சேதப்படுத்துவதோ, அதிலிருந்து தேனெடுப்பதோ இல்லை. மாறாக அது வழிபாட்டுக்கு உரியதாகவும், விவசயிகளின் நம்பிக்கைக்கான சின்னமாகவும் இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 311

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    அதன்படி, இந்த மலையில் மூன்று பெரிய தேன்கூடுகளை கட்டியிருந்தால் அந்த வருடம் விவசாயம் சிறப்பாக இருக்கும் என்றும், இரண்டு கூடுகளைக் கட்டியிருந்தால் விளைச்சல் சுமாரக இருக்கும் என்றும், ஒரே ஒரு கூடு மட்டும் கட்டியிருந்தால் போதிய விளைச்சல் இருக்காது என்றும் நம்புகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 411

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    அதன்படி, தேனீக்களும் அவைகட்டும் தேன் கூடுகளும், தேன்கூடு அமைந்திருக்கும் மலையும் இவ்வூர் மக்களின் வாழ்வோடும் உணர்வோடும் இணைந்து கலந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் இந்த பிறவியில் தேனீக்களாய் பிறந்து, இந்த மலையை கட்டிக் காத்து, முருகனின் அருள் பெற்று சாபவிமோசனம் அடைவார்கள் என்றும் சொல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 511

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தேன்மலையில் முருகனுக்கு பல படிகளை அமைத்து கட்டப்பட்டுள்ளது சுப்பிரமணியசுவாமி கோவில். இங்கே சித்தர்கள் பலர் தங்கி இருந்து முருகனின் அருளைப் பெற்று, முக்தி அடைந்ததாகவும், அந்த சித்தர்கள் இன்றும் முருகனை தரிசித்து வருவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

    MORE
    GALLERIES

  • 611

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    இங்கே பெருமானந்த சுவாமி என்ற சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது. இவர் இந்த மலையில் நீண்ட காலம் தங்கியிருந்து முருகனை வழிபட்டதாகவும், மக்களுக்கு அபிஷேக தீர்த்தம் வழங்கி நோய் தீர்க்க உதவி புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 711

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    இந்த தேன்மலை முருகன் கோவிலில் அழகிய சுனைகள் இருக்கின்றன. அந்த சுனையில் இருந்துதான் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த சுனைக்கு ஓர் தனிச்சிறப்பு இருப்பதாகவும், அது பற்றிய விவரங்களையும் அப்பதி மக்கள் வியப்புடன் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 811

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    அதாவது, புதுக்கோட்டை மன்னர் வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றபோது, மன்னருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் யாரேனும் இருக்கிறார்களா? என்று உடன் வந்த வர்கள் தேடினார். அப்போது அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், இது குறித்து கேட்டபோது, இங்கு வைத்தியர் யாரும் இல்லை ஆனால் மருந்து இருக்கிறது என்று கூறினான்.

    MORE
    GALLERIES

  • 911

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    பின்னர், அருகில் இருக்கும் தேன் மலையை சுட்டிக்காட்டி, முருகன் அருள்புரியும் அந்த மலையில் இக்கும் சுனை நீரை கொண்டு வந்து மன்னருக்கு கொடுத்தால் வயிற்று வலி நீங்கும் என கூறினான். அவ்வாறே செய்ய மன்னருக்கு வலி நீங்கியது. அதன் பின்னர் மன்னரின் ஆணைப்படி தேனிமலை முருகன் ஆலயம் கட்டப்பட்டது என்று கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1011

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    இந்த தேன் மலையின் அடிவாரத்தில் தேனிப் பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழியில் இளைப்பாறிச் செல்ல மண்டபங்களும் கடப்பட்டுள்ளன. மேலேவுள்ள கோவிலின் மகாமண்டபத்தில் மயில் வாகனமும், அர்த்த மண்டபத்தில், விநாயகர், சிவன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நந்தி மற்றும் நாகரும் அருள்புரிகினற்னர். கருவறையில் அமர்ந்த கோலத்தில் வள்ள-தெய்வானையுன் சுப்பிரமணிய சுவாமி கருணையின் வடிவாய் காட்சியளிக்கிறார். நோய்கள் நீங்கவும், மனக்குறைகள் விலகவும் இங்கே வழிபடுதல் சிறந்தது என்கின்றனர் பக்தர்கள்.

    MORE
    GALLERIES

  • 1111

    பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

    இந்த தேன் மலையின் உச்சியில் இருந்து கீழே பார்ப்பது அழகாக வியூவைக் கொடுக்கிறது. சில்லென்று வீசும் காற்றும், சுனைகளும், கண்களுக்கு விருந்து படைக்கும் பசுமையும் என பக்தி மட்டும் அல்லாமல் சிறந்த சுற்றுலாவாகவும் இந்த தேனிமலை பயணம் அமையும். இந்த இடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

    MORE
    GALLERIES