முகப்பு » புகைப்பட செய்தி » புதுக்கோட்டை » பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

ஆண் நண்பருடன் தாய் தனிமையில் இருப்பதை பார்த்த 17 வயதான மூத்த மகன் வெற்றிவேல் கடந்த 13-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • 17

    பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

    மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர்கள் முருகேசன் - ராசாத்தி தம்பதி. முருகேசன் - ராசாத்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த ராசாத்தி தனது இரு மகன்களுடன் மாவட்டம் அன்னவாசலில் வசித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 27

    பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

    இந்நிலையில் ராசாத்திக்கும், அதே பகுதியில் வசித்த உறவினர் முத்துக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ராசாத்தியின் வீட்டிலேயே அடிக்கடி தனிமையிலும் சந்தித்துள்ளனர். ஆண் நண்பருடன் தாய் தனிமையில் இருப்பதை பார்த்த 17 வயதான மூத்த மகன் வெற்றிவேல் கடந்த 13-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் மரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன், மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார்.

    MORE
    GALLERIES

  • 37

    பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

    இந்நிலையில் மகனின் சாவிற்கு காரணமான முத்துக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் முருகேசன். அதன்படி முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து முத்துக்குமார் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். (படத்தில் : முத்துகுமார்)

    MORE
    GALLERIES

  • 47

    பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

    முருகேசன் தான் வைத்திருந்த கத்தியால் முத்துக்குமாரை சரமாரியாக குத்தியிருக்கிறார். மேலும் வீட்டிலிருந்த குத்து விளக்கை வைத்தும் அவரை பலமாக தாக்கி உள்ளனர். இதில் நிலைகுலைந்த முத்துக்குமார் வீட்டிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    MORE
    GALLERIES

  • 57

    பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

    சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார் முத்துக்குமார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து முருகேசன் - ராசாத்தி தம்பதி மற்றும் அவர்களின் உறவினர்கள் பாலாமணி, அன்னபூரணி, சண்முகம், நாகராஜ், சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 67

    பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

    7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ராசாத்தி உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் முருகேசன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 77

    பெண்ணுடன் கள்ளக்காதல்.. இளைஞர் குத்திக் கொலை.. மகனின் சாவுக்கு பழிவாங்கிய தந்தை..!

    38 வயதான ராசாத்திக்கும், 30 வயதான முத்துக்குமாருக்கும் இடையேயான திருமணத்தை மீறிய உறவு இரண்டு மரணங்களுக்கு காரணமாக அமைந்து விட்டது.

    MORE
    GALLERIES