புதுச்சேரி மற்றும் சென்னையில் temple adventure என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் அரவிந்த். உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர் . உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல்வீரர்கள் செஸ் விளையாடினார்கள்.தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்துடன் சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் , செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.