பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் புதுச்சேரி ராஜ நிவாஸில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகை வெளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கல் பானையில் அரிசியை இட்டு உறியடி எடுத்து பொங்கல் விழாவை தமிழிசை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.