முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » வெள்ளத்தில் மிதக்கும் கூடலூர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

வெள்ளத்தில் மிதக்கும் கூடலூர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

Gudalur | நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக புத்தூர் வயல் இருவயல், புரமண வயல் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம், வீடுகளுக்குள்ளும் விளைநிலங்களுக்குள்ளும் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. (செய்தியாளர்: ஐயாசாமி, ஊட்டி)

  • 14

    வெள்ளத்தில் மிதக்கும் கூடலூர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. கூடலூர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் பல கிராமங்களில் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்துள்ளது. கூடலூரில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் இந்த கனமழை காரணமாக இருவயல், புரமன வயல்,புத்தூர் வயல் உள்ளிட்ட கிராமங்களில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    வெள்ளத்தில் மிதக்கும் கூடலூர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

    புத்தூர் வயல் பகுதியில் குடியிருப்புகளுக்குள்ளும் சாலைகளிலும் விவசாய நிலங்களிலும் மழை நீர் வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    வெள்ளத்தில் மிதக்கும் கூடலூர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

    கூடலூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 170 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கரையோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 44

    வெள்ளத்தில் மிதக்கும் கூடலூர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

    மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்

    MORE
    GALLERIES