நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் வானிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவு பனி மூட்டம் நீர்பனி மற்றும் உறை பனி தாக்கம் அதிக அளவு காணப்பட்டு வந்தது. இதனால் உள்ளுர் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும், பனியின் காரணமாக மலைக்காய்கறிகளும் கருகும் அபாயாயம் ஏற்பட்டு வந்தது. பொதுவாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மட்டுமே பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி கடந்து, மார்ச் மாத இறுதி வந்த நிலையிலும், பனிப்பொழிவு காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பனி மற்றும் மிதமான வானிலை என மாறிமாறி காலநிலை நிலவி வருகிறது. வார இறுதி நாட்களில் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் மிதமாகவும் நகரின் பிரதான பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது. இந்த வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்தது. உள்ளூர் மக்களும் இந்த வானிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். வார இறுதி நாட்களில் இத்தகையை வானிலையை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.