முதுமலை வனப்பகுதியில் உள்ள பொக்காபுரம் கோவிலுக்கு செல்லும் சாலை ஓரம் மரத்தில் உடலை தேய்த்து மல்லாக்காக படுத்துறங்கி விளையாடிய கரடி.(செய்தியாளர்: ஐய்யாசாமி, ஊட்டி)
முதுமலை வனப்பகுதியில் தற்போது இலந்தை பழம் சீசன் துவங்கி உள்ளது. இதனால் பழங்களை தேடி கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
2/ 4
அடர் வனப்பகுதிகள் மட்டுமல்லாமல் சாலையோரங்களிலும் கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் பொக்காபுரம் கோவிலுக்கு செல்லும் சாலையோரம் மரத்தில் உடலை தேய்த்து, அமர்ந்து மல்லாக்காக உறங்கி கரடி விளையாடியது.
3/ 4
இதைச் அச்சாலை வழியாக கோவிலுக்கு சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர் கரடி செய்த செயல்களை கண்டு ரசித்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
4/ 4
தற்போது கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் ஆர்வக்கோளாறு காரணமாக வாகனங்களில் இருந்து இறங்கி கரடிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அடர் வனப்பகுதிகள் மட்டுமல்லாமல் சாலையோரங்களிலும் கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் பொக்காபுரம் கோவிலுக்கு செல்லும் சாலையோரம் மரத்தில் உடலை தேய்த்து, அமர்ந்து மல்லாக்காக உறங்கி கரடி விளையாடியது.
தற்போது கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் ஆர்வக்கோளாறு காரணமாக வாகனங்களில் இருந்து இறங்கி கரடிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.