இந்தியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அவை முற்றிலும் விசித்திரமான சொல்லப்போனால் விநோதமானவையாக இருக்கின்றன. இன்னும் இப்படியான சடங்குகளை செய்கிறார்களா என்று கேட்கும் அளவிற்கு இருக்கின்றன. அப்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தின் சடங்கை தான் பார்க்க போகிறோம்.
ஆரம்பித்த கதை : முன்னொரு காலத்தில் ஹிமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமத்தில், பேய்கள் மற்றும் அரக்கர்கள் அலைந்து திரிந்ததாக சொல்லப்படுகிறது. அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தியிருக்கும் திருமணமான பெண்களை அழைத்து சென்று விடுமாம். இப்படி நடந்து கொண்டிருக்க இந்த கிராமத்து பெண்களை லாஹு கோண்ட் என்ற தெய்வம் காப்பாற்றியுள்ளது.
ஆடை உடுத்தாத பெண்கள்: லாஹு கோண்ட் தெய்வம் பேய்களை அழித்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக சாவான் மாதத்தில் 5 நாட்கள் இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகள் அணிவதில்லை. இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் வாலிப பெண்கள் ஒற்றை ஆடை உடுத்திக்கொள்ள மட்டும் அனுமதி அளித்துள்ளனர். இந்த சமயத்தில் கம்பளியால் செய்யப்பட்ட பட்காவைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் வயது முதிர்ந்தவர்கள் நிர்வாணமாகவே இருக்கின்றனர். இந்த விதியை மீறி ஆடை அணியும் பெண்கள் சிறிது நாட்களிலேயே துர்சம்பவங்களை சந்திப்பதால் யாரும் இந்த பாரம்பரியத்தை மீர முயல்வதில்லை. இன்றைய காலத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள் நிர்வாணமாக வெளியே வருவதற்கு பதிலாக வீட்டிற்குள்ளேயே பூட்டி இருக்கிறார்கள்.