முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » திருப்பதி: சிறப்பு தரிசன கட்டண டோக்கன் புத்தாண்டு வரை விற்று தீர்ந்தது...

திருப்பதி: சிறப்பு தரிசன கட்டண டோக்கன் புத்தாண்டு வரை விற்று தீர்ந்தது...

  • 15

    திருப்பதி: சிறப்பு தரிசன கட்டண டோக்கன் புத்தாண்டு வரை விற்று தீர்ந்தது...

    திருப்பதி திருமலை கோவிலில் பக்தரகளுக்கான சிறப்பு தரிசன கட்டண டோக்கன்  2021ம் ஆண்டின் டிசம்பர் 31ம் தேதி வரை விற்று  தீர்ந்தன. சிறப்பு தரிசன கட்டண டோக்கன் இனி 2022ம் ஆண்டுதான் தொடங்கும்.

    MORE
    GALLERIES

  • 25

    திருப்பதி: சிறப்பு தரிசன கட்டண டோக்கன் புத்தாண்டு வரை விற்று தீர்ந்தது...

    கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை தொடர்ந்து திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இலவச தரிசனத்துக்கான டோக்கன் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 35

    திருப்பதி: சிறப்பு தரிசன கட்டண டோக்கன் புத்தாண்டு வரை விற்று தீர்ந்தது...

    இதேபோல், நாள்தோறும் 300 ரூபாய் தரிசனத்துக்கு 12  ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.  300 ரூபாய் தரிசனத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

    MORE
    GALLERIES

  • 45

    திருப்பதி: சிறப்பு தரிசன கட்டண டோக்கன் புத்தாண்டு வரை விற்று தீர்ந்தது...

    ஆன்லைன் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில்  டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்ட நிலையில்,  நவம்பர் , டிசம்பர் மாதம் முழுவதற்குமான 300 ரூபாய் டிக்கெட் விற்று தீர்ந்தன. இதனால், சிறப்பு கட்டண தரிசன டோக்கன் மூலம் 2022ம் ஆண்டுதான்  வெங்கடேஷ பெருமாளை தரிசிக்க முடியும். அதேவேளையில், இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் ஆன்லைன் மூலம் நாளை தொடங்கவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    திருப்பதி: சிறப்பு தரிசன கட்டண டோக்கன் புத்தாண்டு வரை விற்று தீர்ந்தது...

    அதன்படி நாளொன்றுக்கு 8000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட இருக்கும் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டண டோக்கனை போன்று இலவச டோக்கனும் விரைவில் விற்று தீரக்கூடும் என்பதால் காலையிலேயே  முன்பதிவு செய்வதன் மூலம் பக்தர்கள் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். காலை 9 மணிக்கு முன்பதிவு தொடங்கவுள்ளது. 

    MORE
    GALLERIES