முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

குளத்தின் கரையிலேயே கொட்டகை அமைத்து லிங்கத்தை நிறுவவும், அதை வழிபாடு செய்யவும் உள்ளூர் மக்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளக்கரையில் உள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.

  • 17

    திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

    நாடெங்கிலும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. உங்கள் வயதுக்கும், அனுபவத்திற்கும் நீங்களும் கூட குறைந்தபட்சம் 10, 20 சிவன் கோவில்களில் வழிபாடு நடத்தியிருப்பீர்கள். அனைத்து கோவில்களிலுமே கருமை நிறத்திலான கிரானைட் கல்லில் சிவலிங்கம் இருப்பதை பார்த்து தரிசனம் செய்திருப்பீர்கள். இந்த லிங்கம் பெரும்பாலும் பண்டைய கால மன்னர்களால் அல்லது முன்னோர்களால் நிறுவப்பட்டவை ஆகும்.

    MORE
    GALLERIES

  • 27

    திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

    அதே சமயம், அமர்நாத், கைலாசா போன்ற புனித ஸ்தலங்களில் ஆங்காங்கே இயற்கையாகவே பனி லிங்கம் உருவாகி காட்சியளிப்பதையும் கூட நீங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகளின் வாயிலாக அறிந்திருப்பீர்கள். அப்படியொரு நிகழ்வு தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

    இங்குள்ள கோபார்தங்கா என்ற பகுதியில் உள்ள கங்கனா என்ற குளத்தில் உள்ளூர் குழந்தைகள் இருவர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீரில் மிதந்து வந்த வெள்ளை நிற லிங்கத்தை இந்தக் குழந்தைகள் கண்டெடுத்தனர். இதுகுறித்த தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியது. இந்த நிலையில், அங்குள்ள அர்ச்சகர் ஒருவர், இதனை பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு சென்றார்.

    MORE
    GALLERIES

  • 47

    திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

    ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “இந்த சிவலிங்கம் யார் ஒருவருடைய வீட்டிலும், கோவிலிலும் தங்காது’’ என்று கூறிய அந்த அர்ச்சகர் அதை மீண்டும் குளத்துக் கரையிலேயே வைத்துவிட்டார். இதை ஏன் கோவிலில் நிறுவ முடியாது என்ற காரணத்தை அவர் கூறவில்லை.

    MORE
    GALLERIES

  • 57

    திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

    அதே சமயம், தற்காலிக ஏற்பாடாக, சீதாலா கோவிலில் இந்த லிங்கம் வைக்கப்பட்டது. அங்கு 4 நாட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த லிங்கத்தை வழிபடுவது இயலாத காரியம் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவலிங்கம் மீண்டும் குளத்தின் கரைக்கே கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில் குளத்தின் கரையிலேயே கொட்டகை அமைத்து லிங்கத்தை நிறுவவும், அதை வழிபாடு செய்யவும் உள்ளூர் மக்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளக்கரையில் உள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

    வேறு எங்கும் வைக்க இயலவில்லை : குளக்கரையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் வேறு எங்குமே தங்கவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நாராயணன் சாது என்பவர் கூறுகையில், “ஒருவர் மாற்றி ஒருவராக 7 பேர் இந்த லிங்கத்தை அவர்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால், லிங்கத்தை அவர்களால் வைத்திருக்க இயலவில்லை. இந்தக் குளக்கரையை தவிர வேறெங்கும் இந்த சிவலிங்கத்தை நிறுவ முடியவில்லை. ஆகவே, இங்கேயே கோவில் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான நன்கொடை வசூல் நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 77

    திடீரென்று தோன்றிய வெள்ளை நிற லிங்கம்..! தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

    குளக்கரையில் நிறுவப்பட்டுள்ள வெள்ளை நிற லிங்கத்தை தரிசிப்பதற்காக நாள்தோறும் எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர். இந்தச் செய்தி அப்பகுதியில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    MORE
    GALLERIES