முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

விசாகப்பட்டினத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றுள்ளார்.

  • 18

    ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

    ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் தலைவருமான முகேஷ் அம்பானி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.

    MORE
    GALLERIES

  • 28

    ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

    ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்த முகேஷ் அம்பானியை வரவேற்றார். தொடர்ந்து, மாநாட்டில் உரையாற்றிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆந்திராவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சில்லறை வணிகம் மூலம் ஆந்திராவில் உருவாக்கப்படும் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 38

    ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

    ஆந்திராவில் உள்ள தொழில்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தின் இன்ஜீனியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்கவிழாவைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து தொடங்கி வைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 48

    ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

    இந்த மாநாட்டில் பேசிய ஆந்திர மாநில முதல்வர் 20 செக்டர்களுக்கு 340 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்படவுள்ளதாகவும், இதனால் சுமார் 6 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 58

    ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

    இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர், ஆந்திர மாநிலத்தில் 2002 இல் கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் உருவாக்கப்பட்ட KG-D6 இல் சுமார் 1,50,000 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் இந்தியாவின் சுமார் 30 சதவீத தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 68

    ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

    தொடர்ந்து ஜியோ நிறுவனத்தைப் பற்றிப் பேசிய அவர், 98 சதவீத ஆந்திர மாநில வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை முழுமையாக அடைந்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆந்திரா முழுவதும் ஜியோவின் ட்ரூ 5 ஜி சேவையை வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 78

    ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

    மேலும் ஆந்திராவில் 6,000 கிராமங்களில் உள்ள 1.2 லட்சம் மசாலா வியாபாரிகளுக்கு இயந்திரங்கள் விநியோகம் செய்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் சில்லறை வணிகம் மூலம் சுமார் 20,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 88

    ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உறுதி

    மேலும் தொடர்ந்து, ஆந்திராவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஆந்திர மாநில அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES