புதுச்சேரியில் பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிப்பவர் முத்தமிழ்ச்செல்வன்.இவர் அங்குள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது நுண்கலை ஆசிரியர் உமாபதியிடம் கிராம புறங்களில் பயனற்று கிடக்கும் தென்னை நார்,வாழை மட்டை, பனை மர பொருட்கள் ஆகியவற்றை கொண்டு கலை பொருட்களை உருவாக்கும் பயிற்சியை பெற்றார்.
என் பிறந்த மண் புதுச்சேரி அரசு பள்ளியில் பயிலும் முத்தமிழ்ச்செல்வன், 11வகுப்பு மாணவன் அதை சிற்பமாக வெளிப்பாடு செய்திருக்கிறான். அதை பதிவிட்டTrGayathri Srikanthக்கு நன்றி. ஒரு கலைவிமர்சகன் என்ற வகையில் இதனைமிக உன்னதமான தமிழ் மண்ணின்அடையாளத்தோடு கூடிய அசல் படைப்புக் கலை வெளிப்பாடாக கருதுகிறேன். மேல்நாட்டுச் சூரியனிடமிருந்து கடன்வாங்கித் தேய்ந்து போகும் நிலாக்களாக நிறைய படைப்புகள் நவீனத் தமிழ் ஓவியரகளால் செய்யப்படும்போது மாணவன் முத்தமிழ்ச் செல்வன் படைப்பு மிகவும் அசல் ஜீவரசத்துடன் விளங்குவதாக நான் கருதுகிறேன்.
முற்றிலும் தமிழ் மண்ணில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட தமிழன்னையின் தமிழணங்கே வடிவம் சோலை இலை மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டது. நமது கலை தமிழ் அடையாளம் கொண்டதாக மாறவேண்டும் என்று கடந்த 30ஆண்டுகளாக நான் எனது “தமிழ்அழகியல்” நூலில் வற்புறுத்தி வருவது இன்று இயல்பாகவே கள்ளம் கபடமற்ற நிலையில் நனவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.