வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடாதது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி அமேதி தொகுதி வளர்ச்சிக்கு இடையூறு செய்ததாகவும், ஐஐடி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
Web Desk | May 1, 2019, 10:24 AM IST
1/ 10
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.
2/ 10
நாட்டுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் நீடிப்பதால் அதனை எதிர்க்க நாட்டுக்கு வலுவான அரசு தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3/ 10
உத்தரபிரதேச மாநிலம் பரைக் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். பயங்கரவாதத்தை ஒடுக்கும் திறன் பெற்ற வலிமையான அரசு வேண்டுமா? அல்லது பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கும் அரசு வேண்டுமா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
4/ 10
பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பில் தாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும் மோடியை பார்த்து அஞ்சிய பயங்கரவாத குழுக்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
5/ 10
மத்திய பிரதேசம் மாநிலம் திகம்கார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் 15 பணக்காரர்களுக்கு மட்டுமே பணம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.
6/ 10
தான் ஆட்சிக்கு வந்தால் பணக்காரர்களிடம் கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்து, ஏழைகளுக்கு வழங்குவேன் என்றும், கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயிகளை காவல்துறை கைது செய்யாது என்றும் தெரிவித்தார்.
7/ 10
இதற்கிடையே, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
8/ 10
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி அமேதி தொகுதி வளர்ச்சிக்கு இடையூறு செய்ததாகவும், ஐஐடி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
9/ 10
வாராணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து தான் போட்டியிடாதது குறித்து விளக்கமளித்த ப்ரியங்கா காந்தி, ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டால் அந்த தொகுதியில் மட்டும் கவனம் செலுத்துவேன் என மற்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிருப்தி அடைவார்கள் என குறிப்பிட்டார்.
10/ 10
மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மோடி வெட்கமில்லாத பிரதமர் என விமர்சித்தார். 40 திரிணாமுல் எம்எல்ஏக்கள் தன்னோடு தொடர்பில் இருப்பதாக பிரதமர் தெரிவித்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக திருடர்களால் நிரம்பியுள்ளதாகவும், திரிணாமுல் தியாகிகளால் நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.