முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

கொரோனா மற்றும் தொடர் மழையால் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை முற்றிலும் நின்று போனதால் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

  • 19

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை ஓட்டியுள்ள தமிழக கிராமங்களில் மண்பாண்ட தொழிலே பிரதானம். மண்பாண்ட தொழிலில் ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு புதுச்சேரி ஏரி மற்றும் குளங்களில் களிமண் எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    இதனால் மண்பாண்டத் தொழிலாளர்கள் அருகில் உள்ள தமிழக கிராமங்களில் இருந்து மண், களிமண் போன்றவற்றை விலைக்கு வாங்கி வந்து மண்பாண்டங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். கூனிமுடக்கு, தென்னல், கென்டிகுப்பம், முருங்கப்பாக்கம், வில்லியனுார், தவளகுப்பம், மதகடிப்பட்டு, கணுவாய்ப்பேட்டை கண்டமங்கலம், பெரிய பாபு சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானைகளை தயாரித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 39

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    கொரோனாவால் 9 மாதங்களாய் விற்பனையுமின்றி உற்பத்தியும் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையால் மீண்டு வரலாம் என காத்திருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 49

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    ஆனால் தொடர் புயல் மற்றும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் விலைக்கு களிமண் வாங்கி வந்து பானை உற்பத்தி செய்தாலும் மக்கள் மத்தியிலும் மண்பாண்ட பொருள் வாங்குவதில் ஆர்வம் குறைந்து விட்டதால் மண்பாண்ட தொழில் கேள்விக்குறியாகியுள்ளது..

    MORE
    GALLERIES

  • 59

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    பாரம்பரியமிக்க இத்தொழிலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் அடுத்த சந்ததியினர் கூட மண்பாண்ட தொழிலை விரும்பவில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 69

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    இனி வரும் காலங்களில் எங்கள் சந்ததியினர் மண்பாண்ட தொழில் செய்ய ஆர்வம் காட்டவில்லை என்று மாற்று தொழில் தேடி செல்வதாக மண்பாண்ட கலைஞர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 79

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகள் விற்க முடியாத நிலை, கார்த்திகை தீபத்தின் போது அகல் விளக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகையிலாவது மண்பானை செய்து விற்கலாம் என்று நினைத்தால் மழை பெய்து மண்பாண்டத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    பொங்கலுக்கு இன்னும் நாலு தினங்களே உள்ள நிலையில் பானை செய்து வைத்து சூலை வைக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், மழை இல்லாமல் இருந்தால் சூலை வைத்து மட்பாண்டங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியுமென சோகத்துடன் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்..

    MORE
    GALLERIES

  • 99

    கொரோனா, தொடர் மழையால் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை விற்பனை மந்தம்... தொழிலாளர்கள் வேதனை

    புதுச்சேரி-தமிழக அரசுகள் அரசு இடங்களில் களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், இதற்கு நிதி உதவி வழங்க வேண்டும்,அரசு செலவில் சூளை அமைத்து தரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது...

    MORE
    GALLERIES