முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

ஜம்மு காஷ்மீரில் ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தில் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றார்.

  • 18

    இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

    தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது ஜம்மு காஷ்மீரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

    இதனிடையே, காசிகுண்ட் என்ற இடத்தில் பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக 27 ஆம் தேதி பிற்பகலுக்கு பிறகு நடைபயணம் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 38

    இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

    வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதாலும் ஸ்ரீநகரில் வரும் 30 ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாலும் உரிய பாதுகாப்பு வழங்க அவர் வலியுறுத்தியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 48

    இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவந்திபோராவில் தனது நடைபயணத்தை ராகுல்காந்தி மீண்டும் தொடங்கினார். செர்சூ கிராமத்தில் இருந்து புறப்பட்ட நடைபயணத்தில், முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி மற்றும் அவரது மகள் இல்திஜா முஃப்தி பங்கேற்றனர்.

    MORE
    GALLERIES

  • 58

    இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

    வழி நெடுக்கிலும் சாலையின் இருபுறமும் நின்ற ஏராளமான தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

    MORE
    GALLERIES

  • 68

    இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

    அதை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அவர்களின் நினைவிடத்தில் மலர் கொத்துக்களை வைத்து ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

    MORE
    GALLERIES

  • 78

    இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

    லெத்போரா என்ற இடத்தை அடைந்த போது, நடைபயணத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்தார். அவரை  ராகுல்காந்தி, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் ஆரத் தழுவி வரவேற்றனர்.

    MORE
    GALLERIES

  • 88

    இறுதிக்கட்டத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - பிரியங்காவை ஆரத் தழுவி வரவேற்ற மெகபூபா

    ராகுல்காந்தியுடன் ஏற்கனவே நடைபயணத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பாரத் ஜோடோ யாத்திரைக்கு காஷ்மீரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் டுவிட்டர் பதிவில், வயது வித்தியாசமின்றி அனைத்து பாலினத்தவர்களும் நடைபயணத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

    MORE
    GALLERIES