முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ஓஹொ.. இதுதான் காரணமா? உலகின் உயரமான ரயில்வே பாலத்தில் ஒரேயொரு தண்டவாளம் ஏன் தெரியுமா?

ஓஹொ.. இதுதான் காரணமா? உலகின் உயரமான ரயில்வே பாலத்தில் ஒரேயொரு தண்டவாளம் ஏன் தெரியுமா?

அழகான சமவெளிகளுக்கு இடையே அமைந்துள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்பதால், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கும்.

  • 14

    ஓஹொ.. இதுதான் காரணமா? உலகின் உயரமான ரயில்வே பாலத்தில் ஒரேயொரு தண்டவாளம் ஏன் தெரியுமா?

    உலகின் மிக உயரமான பாலமாக கருதப்படும் செனாப் பாலம் வழியாக ஜம்முவை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பாலம் சுமார் 321 மீட்டர் உயரமுடையது, அதன் அகலமும் அதிகம். இந்த பாலத்தை உருவாக்க ரயில்வே அதிக முயற்சியையும் பணத்தையும் செலவிட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த பாலம் ஒற்றையடிப்பாதையாக மட்டுமே அமைக்கப்பட்டது. இத்தனைக்குப் பிறகும், ஏன் இங்கு ஒற்றைப் பாதை அமைக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த கேள்விக்கான பதிலை அறிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

    MORE
    GALLERIES

  • 24

    ஓஹொ.. இதுதான் காரணமா? உலகின் உயரமான ரயில்வே பாலத்தில் ஒரேயொரு தண்டவாளம் ஏன் தெரியுமா?

    இந்த பாலம் கத்ரா மற்றும் பனிஹால் இடையே அமைக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்குவது மிகவும் சிக்கலான காரியம் என்பதால், வேலையை முடிக்க பல ஆண்டுகள் ஆனது. இந்த பாலம் மேலே இருந்து பார்த்தால், மிகவும் அகலமானதாக இருக்கும். அதில் இரண்டு பாதைகள் வசதியாக அமைக்கப்படலாம் என்று எல்லோரும் கூறுவார்கள். இருப்பினும், அறிக்கைகளின்படி, அதை அவ்வாறு மாற்றாததற்கு சில காரணங்கள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 34

    ஓஹொ.. இதுதான் காரணமா? உலகின் உயரமான ரயில்வே பாலத்தில் ஒரேயொரு தண்டவாளம் ஏன் தெரியுமா?

    இந்த பாலம் இவ்வளவு உயரத்தில் உள்ளதால், தண்டவாளத்தின் இருபுறமும் போதுமான அளவு இடத்தை விட வேண்டும். இல்லை என்றால், பழுதுபார்க்கும் நேரத்தில் பொருட்களை கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருக்கும். பாதைக்கு அருகில் அதிக இடம் இல்லாமல் போனால், அதிக சாமான்களை அங்கு வைக்க முடியாது. பின்னர் அதை மீண்டும் மீண்டும் கீழிருந்து மேலே தூக்க வேண்டும். ஆனால் இப்போது இந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்காது.

    MORE
    GALLERIES

  • 44

    ஓஹொ.. இதுதான் காரணமா? உலகின் உயரமான ரயில்வே பாலத்தில் ஒரேயொரு தண்டவாளம் ஏன் தெரியுமா?

    அழகான சமவெளிகளுக்கு இடையே அமைந்துள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்பதால், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கும். அதனால் இந்த பாலத்தில் மக்கள் நடமாடுவதற்கு பாதையை ஒட்டி பெரிய இடம் தேவைப்பட்டது. தவிர, இந்த வழித்தடத்தில் ரயில்களின் இயக்கம் 2 தடங்கள் தேவைப்படும் அளவுக்கு இல்லை.
    பாலத்தில் இரட்டை ரயில் பாதை அமைத்தால், அதை நிச்சயம் அகலப்படுத்த வேண்டும். உயரம் அதற்கு மீண்டும் ஒரு தடையாக இருக்கும். அதோடு செலவும் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES