ஒடிசாவில் மதுபாட்டில்களை வீடுகளுக்கே டெலிவரி செய்யும் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபாட்டில்களை மக்கள் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படும். ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. செல்போன் எண், வாட்ஸ் ஆப் மூலமாகவும் ஆர்டர் செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மக்கள் கூட்டத்தை தவிர்க்க மதுக்கடைகளில் மது விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்த மதுபான டெலிவரி சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.