மேலும், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தொடக்க விழாவின் போது மக்களவை சபாநாயகர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடமாகவும், உறுப்பினர்கள் அமர்வதற்கு போதுமான இடமில்லாமலும் இருப்பதால், சுமார் 200 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்திற்காக டிசம்பர் 10, 2020 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இரு அவைகளைக் கொண்டு பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888 உறுப்பினர்கள் அமரும் வண்ணமும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்கள் அமரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.