நாட்டில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் மாபெரும் பொதுப் போக்குவரத்து சேவை துறையாக இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. இவ்வளவு அதிகமான மக்கள் பயன்படுத்தும் ரயில்களும், ரயில் நிலையங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்ட வேண்டும் தானே! குறிப்பாக, சுகாதாரம் மேம்பட்ட நிலையில் இருந்தால் தான் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முகம் சுளிக்காமல் செல்ல முடியும்.
இதனால் தான் கடந்த 2019ஆம் ஆண்டில் ‘தூய்மையான ரயில், தூய்மையான பாரதம்’ என்ற திட்டத்தை இந்திய ரயில்வே துறை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் தூய்மை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது முறையாக கண்காணிக்கப்படுகிறது.
பொதுவாக நாம் இதற்கு முன்பு ஒரு ரயில் நிலையத்திற்குச் செல்லும்போது, அங்கு நம் அனுபவம் எப்படி இருக்கும்? தரைதளங்கள், அமரும் இருக்கைகள் என பல இடங்களில் எச்சில் கறைகள் தென்படும். ஆனால், இவ்வாறு கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை கைவிட்டு, ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது குடிமக்கள் அனைவரின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும்.அதே சமயம், எண்ணற்ற மக்களின் பயன்பாடு காரணமாக இயல்பாகவே அழுக்கு ஏறக்கூடிய தரைதளங்கள், கழிவறைகள், ரயில்கள் போன்றவற்றை பராமரித்து, தூய்மையாக வைத்துக் கொள்வது ரயில்வே நிர்வாகத்தின் கடமையல்லவா!
அந்தக் கடமையை சிறப்பாக செய்யும் ரயில் நிலையங்களை அவ்வபோது அடையாளம் கண்டு இந்திய ரயில்வே பாராட்டி வருகிறது. வெறும் வார்த்தைகளால் அல்லாமல் பல்வேறு தர நிலைகளின் அடிப்படையில், ஒரு ரயில் நிலையத்தின் தூய்மை நிலை கணக்கிடப்படுகிறது. குறிப்பாக திடக் கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், எரிபொருள் மேலாண்மை, தூய்மை நடவடிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில், நாட்டின் தூய்மையான 6 ரயில் நிலையங்களின் படங்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
அந்தக் கடமையை சிறப்பாக செய்யும் ரயில் நிலையங்களை அவ்வபோது அடையாளம் கண்டு இந்திய ரயில்வே பாராட்டி வருகிறது. வெறும் வார்த்தைகளால் அல்லாமல் பல்வேறு தர நிலைகளின் அடிப்படையில், ஒரு ரயில் நிலையத்தின் தூய்மை நிலை கணக்கிடப்படுகிறது. குறிப்பாக திடக் கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், எரிபொருள் மேலாண்மை, தூய்மை நடவடிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில், நாட்டின் தூய்மையான 6 ரயில் நிலையங்களின் படங்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
மும்பை ரயில் நிலையம் : நாட்டின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பை மாநகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையமும் தூய்மை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, மிக அதிகமான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் தூய்மையும், சுகாதாரமும் கடைப்பிடிக்கப்படுவது ஆச்சரியத்தை தருகிறது.
கௌஹாத்தி ரயில் நிலையம்: இது கொஞ்சம் ஆச்சரியமான தகவல் தான். நாட்டின் பெருநகரங்களான டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் கூட தூய்மை நடவடிக்கையில் பின்தங்கி இருக்கும்போது, வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கௌஹாத்தி ரயில் நிலையம் இந்தப் பட்டியலில் 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப்பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.