திருப்பதியில் உள்ள போலீஸ் கவாத்து மைதானத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா தலைமையில் நேற்று இரவு சங்கராந்தி கொண்டாட்டம் நடைபெற்றது.
2/ 15
இந்த நிகழ்ச்சியில் திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட்ரமணா, எஸ் பி பரமேஸ்வர ரெட்டி, மற்றும் போலிஸ் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
3/ 15
முதலில் அமைச்சர் ரோஜா உட்பட பெண்கள் மாக்கோலம் போட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
4/ 15
அதனை தொடர்ந்து கோழிப் பந்தயம், ஹரி கதை, கபடி போட்டி ஆகியவை உள்ளிட்ட சங்கராந்தி தொடர்பான சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
5/ 15
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரோஜா, சங்கராந்தி திருவிழா நமது வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
6/ 15
இந்த நேரத்தில் மாநில மக்கள் அனைவருக்கும் என்னுடைய சங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
7/ 15
போலீசார் திருவிழா நாட்களில் கூட தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
8/ 15
இதனை கருத்தில் கொண்டு திருப்பதி எஸ் பி பரமேஸ்வர ரெட்டி, போலீஸ் குடும்பங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.
9/ 15
போலீஸ் குடும்பங்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.